வடக்கு, கிழக்கு கடற்றொழில்சார் அபிவிருத்திக்கு நோர்வே உதவ வேண்டும்-டக்ளஸ்

Published By: Daya

13 Dec, 2019 | 02:15 PM
image

மீன்பிடித் துறையை விருத்தி செய்வதற்கான அதிகளவான முதலீடுகளையும் தொழில்நுட்ப உதவிகளையும் வரவேற்பதாகவும், குறிப்பாக கடற்றொழில்சார் செயற்பாடுகளில் பின்தங்கியிருக்கும் வடக்கு,  கிழக்கு பிரதேசங்களின் அபிவிருத்திக்கு பாரிய திட்டங்களை எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நோர்வே அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்தார்

கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்தித்த இலங்கைக்கான நோர்வே தூதுவர் றைனா ஜொனான்லி எஸ்கெட்ல் தலைமையிலான குழுவினரிடம் அமைச்சரினால் குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

மாளிகாவத்தையில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் இன்று நடைபெற்ற குறித்த சந்திப்பில், நாடளாவிய ரீதியில் கடற்றொழில் சார் அபிவிருத்திக்கு நோர்வே மேற்கொண்டு வருகின்ற வேலைத் திட்டங்களுக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் எதிர்காலத்தில் அவை மேலும் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தார்.

இதன்போது கருத்துதெரிவித்த நோர்வே தூதுவர், இலங்கையில் படகு கட்டும் தொழில் துறையிலும் அதேபோன்று நன்னீர் மற்றும் குளம், களப்பு போன்ற நீர் நிலைகளில் கடல் உற்பத்திகளை அதிகரிப்பது தொடர்பாக ஆர்வம் செலுத்தி வருவதாகத் தெரிவித்ததுடன்  குறித்த திட்டம் வெற்றியடையும் பட்சத்தில் தனியார் முதலீட்டாளர்களை அழைத்து வருவதற்கும் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், ஏற்கெனவே வேலைத்திட்டம் ஒன்றை காரைநகர் பகுதியில் ஆரம்பிக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் முதற்கட்டமாகப் பிடிக்கப்படுகின்ற மீன்கள் பழுதடையாமல் பாதுகாக்கும் வகையிலான தொழில்நுட்பம் உள்ளடக்கப்பட்ட  மீன்பிடிப் படகுகள் கட்டுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதுதொடர்பாக ஏற்கெனவே தொழில்சார் சங்கப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடப்பட்டுள்ள நிலையில், வடக்கு கடல்களில் பரீட்சார்த்த முயற்சியாக முதற் கட்டமாக 10 படகுகளை வழங்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

குறித்த முயற்சி வெற்றியளிக்கும் பட்சத்தில் குறித்த படகுகளை ஏற்றுமதி செய்யும் திட்டங்களும் இருப்பதனால் நூற்றுக் கணக்கானோருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்த முடியும் என நம்புவதாகவும் மேலும் தெரிவித்தார்.

நோர்வே அரசாங்கத்தின் குறித்த திட்டத்தினை வரவேற்ற அமைச்சர் டகளஸ் தேவானந்தா, குறித்த திட்டத்தினை உடனடியாக ஆரம்பிக்குமாறும் அதற்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்கத் தான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21