38 பேருடன் நடு வானில் காணாமல்போன சிலி நாட்டு இராணுவ விமானத்தின் பாகங்கள் தென் அமெரிக்காவிற்கும் அந்தாட்டிக்காவிற்கும் இடையே உள்ள கடல் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
சிலியின் நாட்டின் பண்டா அரேனாஸ் பகுதியில் இருந்து கடந்த திங்கட்கிழமை ஹெர்குலஸ் சி 130 என்ற விமானம் 38 பேருடன் அந்தாட்டிக்கா நோக்கி பயணித்தது. புறப்பட்ட ஒரு மணி நேரத்திலேயே கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்த அந்த விமானத்தை தேடும்பணி இரண்டு நாட்களாக நடைபெற்றது.
இந்நிலையில் கடைசியாக தொடர்பில் இருந்த இடத்திலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் மாயமான விமானத்தின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு விமானப்படை தெரிவித்துள்ளது.
தென் அமெரிக்காவிற்கும் அந்தாட்டிக்காவிற்கும் இடையே உள்ள கடல் பகுதியில் விமான பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், விமானத்தில் பயணம் செய்தவர்கள் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்றும் மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து விமானப்படையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM