பிரிட்டன் பொதுத்தேர்தல் முடிவுகள் : பிரதமர் போரிஸ் ஜோன்சன் கட்சி முன்னிலையில்!

Published By: R. Kalaichelvan

13 Dec, 2019 | 10:36 AM
image

பிரிட்டனில் 650 தொகுதிகளைக் கொண்ட பாராளுமன்றத்திற்கான பொதுத்தேர்தல் நேற்று இடம்பெற்றது.

பிரித்தானிய நேரப்படி காலை 7 மணிக்கு ஆரம்பமாகிய வாக்குப்பதிவு, இரவு 10 மணி வரை நடைபெற்றது. அதன்பின்னர் வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகின.

இந்த தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி, தொழிலாளர் கட்சி, தாராளவாத ஜனநாயகவாதிகள், ஸ்கொடிஷ் நஷனல் கட்சி, கிரீன் கட்சி, பிரெக்ஸிட் கட்சி, பிளைட் சிம்ரு ஆகிய கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் பிரித்தானி பொதுத் தேர்தலில் போட்டியிட்டன.

எனினும் பிரதானமான கட்சிகளான பிரதமர் போரிஸ் ஜோன்சனின் கன்சர்வேடிவ், தொழிலாளர் கட்சி ஆகிய கட்சிகளிடையே நேரடி போட்டி நிலவியது.

இறுதிக்கட்ட பிரசாரத்தின்போது கருத்துக்கணிப்பில், போரிஸ் ஜோன்சனின் கன்சர்வேடிவ் கட்சிக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டிருப்பதாகவும், தொங்கு பாராளுமன்றம் அமையவே வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது.

ஆனால், ஆளும் கன்சர்வேடிவ் கட்சி பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவித்தன.

பிபிசி, ஐடிவி மற்றும் ஸ்கை நியூஸ் சேனலால் நடத்தப்பட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில், கன்சர்வேடிவ் கட்சி பெரும்பான்மையை காட்டிலும் 86 இடங்கள் கூடுதலாக வெற்றி பெறும் என்று தெரியவந்துள்ளது.

அதனை உறுதி செய்யும் வகையில் வாக்கு எண்ணிக்கையின் முடிவுகள் இருந்தன. பெரும்பான்மைக்கு மொத்தம் 326 இடங்கள் தேவை என்ற நிலையில் இன்று அதிகாலை நிலவரப்படி 92 தொகுதிகளில் பிரதமர் போரிஸ் ஜோன்சனின் கன்சர்வேடிவ் கட்சி பல்வேறு தொகுதிகளில் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது. தொழிலாளர் கட்சி 77 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.

கன்சர்வேடிவ் கட்சி தொழிலாளர் கட்சியின் கோட்டையாகக் கருதப்படும் பல்வேறு தொகுதிகளிலும் கன்சர்வேடிவ் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். குறிப்பாக வடக்கு இங்கிலாந்து, வேல்ஸ் பகுதிகளில் முக்கிய தொகுதிகளை தொழிலாளர் கட்சி இழந்தது.

ஸ்கொட்லாந்து தேசிய கட்சியானது, தொழிலாளர் கட்சி வசம் இருந்த ரூதர்கிளன், ஹாமில்டன் மேற்கு ஆகிய தொகுதிகளையும், கன்சர்வேடிவ் கட்சி வசம் இருந்த ஆங்கஸ் தொகுதிகளையும் கைப்பற்றியது.

டார்லிங்டன் உள்ளிட்ட சில தொகுதிகளில், கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக கன்சர்வேடிவ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.  தொழிலாளர் கட்சியானது தென்மேற்கு லண்டனில் புட்னி தொகுதியை கன்சர்வேடிவ் கட்சியிடம் இருந்து கைப்பற்றியது.

கன்சர்வேடிவ் கட்சி வெற்றி பெற்றால் போரீஸ் ஜோன்சன் மீண்டும் பிரதமராவார். போரீஸ் ஜோன்சன் மீண்டும் பிரதமராகும் பட்சத்தில், பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றி கிறிஸ்துமஸ் தினத்திற்குள் பிரெக்ஸிட்டை நிகழ்த்த முனைவார் என எதிர்பார்க்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10