குடியுரிமை திருத்த சட்டமூலத்துக்கு எதிரான இந்தியாவின் அசாம் மாநிலத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 11 பேர் காயமடைந்தும் உள்ளனர்.
அசாம் மாநிலத்தில் பதற்றம் நிறைந்த இடங்களில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.
எனினும் அதையும் மீறி ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானில் மத துன்புறத்தல்களுக்கு ஆளாகி இந்தியாவில் தஞ்சம் புகுந்த இஸ்லாமியர்கள் அல்லாத ஏனைய மதத்தவர்களுக்கு குடியுரிமை வழங்க வகை செய்யும் குடியுரிமை சட்டத் திருத்த சட்டமூலம் நேற்று அசாம் மாநிலங்களவையில் நிறைவேறியதை தொடர்ந்து போராட்டங்கள் தீவிரம் அடைந்திருக்கின்றன.
அசாமில் வன்முறையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக 10 மாவட்டங்களில் 48 மணி நேரத்திற்கு இணைச் சேவைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
தற்போது இந்த தடை மேலும் 48 மணி நேரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பதற்றம் இருக்கும் இடங்களில் பொலிஸார் அதிக எண்ணிக்கையில் குவிக்கப்பட்டுள்ளனர்.
அசாம் மற்றும் திரிபுரா மாநிலங்களில் ரயில் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கவுகாத்தி, திப்ருகருக்கு செல்லும் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
மாநில முதல்வர் சர்வானந்த சோனோவால், மத்திய அமைச்சர் ராமேஸ்வர் தேளி உள்ளிட்ட அரசியல்வாதிகளின் வீடுகள் போராட்டக்காரர்களால் தாக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM