திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுங்காயங்களுடன் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
ஹட்டன் பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதியை நோக்கி சென்ற லொறி ஒன்றும், கொட்டகலை கொமர்ஷல் பகுதியிலிருந்து ஹட்டன் நோக்கி சென்ற மோட்டர் சைக்கிள் ஒன்றும், ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் வைத்து மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் மோட்டர் சைக்கிளை செலுத்திய நபரே படுங்காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு விபத்துக்குள்ளாகிய நபர் பாடசாலை மாணவர் என பொலிஸாரின் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(க.கிஷாந்தன்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM