யானை தாக்கி 6 வயது சிறுமி பலி : தந்தை படுகாயம்

Published By: Priyatharshan

02 Jun, 2016 | 03:12 PM
image

( சசி )

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வவுணதீவு கற்பக்கேணி பிரதேசத்தில் யானை தாக்கியதில் 6 வயது சிறுமி பலியானதுடன், அவரது தந்தை படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தந்தையும் மகளும் நேற்று புதன்கிழமை மாலை அவர்களது அயல் குடியிருப்புக்குச் சென்று திரும்புகையில் பற்றைக்காட்டுப் பகுதியில் மறைந்திருந்த யானை இவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. 

இதன்போது காயமடைந்த இருவரும் தாண்டியடி வைத்தியசாலைக்கு எடுத்துவரப்பட்டு பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். 

 

யானையின் தாக்குதலுக்குப் பலியான சிறுமியின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைகளுக்காக வைக்கப்பட்டுள்ளது. 

சம்பவ இடத்திற்கு விரைந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர் துரைரெட்ணம் வைத்தியசாலையில் தாக்கப்பட்டவர்களைப் பார்வையிட்டதுடன், கிராம உத்தியோகத்தர் மற்றும் கிராம மக்களுடனும் சம்பவம் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.

இதையடுத்து பிரதேச செயலாளர் மற்றும் அரசாங்க அதிபர் ஆகியோருடன் யானைத் தாக்குதல் தொடர்பிலும் இப்போதுள்ள அவசரமான தேவைகள், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் தொலைபேசியூடாக கலந்துரையாடினார்.

 

அதனடிப்படையில்  யானைகளை அகற்றுவதற்கு வனவிலங்கு பரிபாலன திணைக்களத்தின் பணிப்பாளருடன் உடனடியாகப்பேசி யானைகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அரசாங்க அதிபர் மாகாண சபை உறுப்பினருக்கு உறுதியளித்ததாக அவர் தெரிவித்தார். 

எவ்வாறாயினும் மக்கள் மீது தாக்குதல் நடத்தும் யானைகளை மக்களது குடியிருப்புப் பிரதேசங்களிலிருந்து உடனடியாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுத்தனர். 

 

தொடர்ச்சியாக நடைபெறும் யானையின் தாக்குதல்களால் வீடுகள், சொத்துக்கள், வயல்நிலங்கள், பயன்தரு மரங்கள் அழந்து வருவதுடன், உயிரிழப்புகளும் காயமடைதலும் மட்டக்களப்பில் தொடர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25