சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுப்பட்ட இந்திய மீனவர்கள் நான்கு பேர் யாழ்.நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுப்பட்ட நான்கு பேரே இவ்வாறு கைது செய்யப் பட்டிருப்பதாகவும், இவர்களிடமிருந்து படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் கைப்பற்பட்டிருப்பதாகவும் கடற்படை பேச்சாளர் கெப்டன் அக்ரம் அலவி தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்துவரப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக யாழ் மாவட்ட கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
மேலும், கைது செய்யப்பட்ட குறித்த மீனவர்கள் தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தை சேர்ந்தவர்களாவார்.
இதேவேளை கடந்த செவ்வாய்க்கிழமை இந்திய மீனவர்கள் 7 பேர் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM