ரொகிங்யா இனத்தவர்களிற்கு எதிரான மியன்மாரின் நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதற்காக ஆங் சான் சூகி ஹேக்கில் உள்ள சர்வதேச நீதிமன்றத்திற்கு சென்றுள்ளார்.
ஹேக்கில் மியன்மாரிற்கு எதிராக இடம்பெறவுள்ள சர்வதேச விசாரணைகளில் அவர் தனது நாட்டின் நடவடிக்கைகளை நியாயப்படுத்தவுள்ளார்.
2017 ம் ஆண்டு மியன்மாரின் ரொகிங்யா இனத்தவர்களிற்கு எதிராக இடம்பெற்றதாக முன்வைக்கப்பட்டுள்ள இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் குறித்து மூன்று நாட்கள் ஹேக்கின் சர்வதேச நீதி நீதிமன்றம் ஆராயவுள்ளது.
கடந்த நவம்பரில் காம்பியா பௌத்தர்கள் பெரும்பான்மையாகவுள்ள மியன்மாரிற்கு எதிராக இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தது.
1948 இன் இனப்படுகொலை தொடர்பான ஐநா பிரகடனத்தின் கீழ் தனக்குள்ள கடப்பாடுகளை மியன்மார் மீறிவிட்டதாக காம்பியா தெரிவித்துள்ளது.
இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யவுள்ளது இது மூன்றாவது தடவை என்பது குறிப்பிடத்தக்கது.
17 நீதிபதிகள் அடங்கிய குழுவினர் முன்னிலையில் ஆங் சான் சூகி இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை வழமை போன்று நிராகரிப்பார்,ரொகிங்யா தீவிரவாதிகளின் நடவடிக்கைகளிற்கு எதிரான சட்டபூர்வமான நடவடிக்கையிலேயே தனது நாட்டு இராணுவம் ஈடுபட்டது என வாதிடுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகின்றது.
காம்பியா 2017 ஆகஸ்டில் தடையை அகற்றல் என்ற இராணுவநடவடிக்கையின் மூலம் மியன்மார் இராணுவம் பரந்துபட்ட திட்டமிட்ட அட்டுழியங்களில் ஈடுபட்டது,இது இனப்படுகொலை என வாதிடவுள்ளது.
மியன்மார் அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கியநாடுகளின் சர்வதேச நீதி நீதீமன்றம் விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ள நிலையில் மியன்மாரின் ரொகிங்யா இனத்தை சேர்ந்த மக்கள் நீதிக்காக தாங்கள்காத்திருப்பதாகதெரிவித்துள்ளனர்.
மியன்மார் இராணுவம் என்னையும் எனது சமூகத்தையும் சேர்ந்த பெண்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியது என ரொய்ட்டரிற்கு தெரிவித்துள்ள 22 ஹசினா பேகம் சர்வதேச சமூகத்தின் உதவியுடன் நாங்கள் நீதியை எதிர்பார்க்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.
அவர்கள் எனக்கு இந்த விடயங்களை செய்தார்கள்,எனது உறவினர்களிற்கும் நண்பிகளிற்கும் இந்த அநீதியை இழைத்தார்கள்,நான் பொய்சொல்லவில்லை, என்னால்இதனை முகத்திற்கு நேரே தெரிவிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பங்களாதேஸ் அகதிமுகாமில் உள்ள ரொகிங்யா அகதிகள் தாங்கள் நீதிக்கான பிரார்த்தனைகளில் ஈடுபடப்போவதாகவும் நோன்பிருக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM