காணாமல் போனவர்களின் உறவினர்கள் சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று யாழ்ப்பாணம்,வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் கவனயீர்ப்பு போராட்டபொன்றை மேற்கொண்டுள்ளனர்.
யாழ்ப்பாணம்
காணாமல் போனவர்களின் உறவினர்கள் இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டபொன்றை மேற்கொண்டனர்.
வவுனியா
வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக கடந்த 1025 நாட்களாக போராடிவரும் காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களால் கொட்டும் மழையில் கவனயீர்ப்பு போராட்டம் இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.
முல்லைத்தீவு
இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் எட்டாம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 1008வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில் தங்களுடைய உறவுகளுக்கு நீதி கோரி தங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக அரசாங்கம் சர்வதேசம் உடனடியாக பதில் கூற வேண்டும் எனக்கோரி கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
இந்த போராட்டத்தில் முல்லைத்தீவு கிளிநொச்சி வவுனியா மன்னார் யாழ்ப்பாணம் மட்டக்களப்பு திருகோணமலை அம்பாறை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பலர் பங்கெடுத்திருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM