மன்னார், பல்லெமுனே கடற்கரை பகுதியில் நேற்று கடற்படையினரால் நடத்தப்பட்ட சோதனையின் போது அனுமதி பத்திரம் இன்றி கடல் அட்டைகள் பிடித்த 04 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற நபர்கள் கைது செய்வதற்காக கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை மன்னார், பல்லெமுனே கடற்கரை பகுதி மையமாக கொண்டு மேற்கொள்ளப்பட்டது.
அங்கு, கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான படகொன்றினை சோதனை செய்த போது அதிலிருந்த 409 கடல் அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
மேலதிக விசாரணையில், மீனவர்கள் செல்லுபடியாகும் அனுமதி பத்திரம் இன்றி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 34,36,42 மற்றும் 45 வயதான மன்னார் பகுதியை சேர்ந்தவர்களாவர்.
கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட சந்தேகநபர்கள் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்திய இரண்டு மீன்பிடி படகுகள் மற்றும் 409 கடல் அட்டைகள் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் மீன்வள ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM