(நா.தனுஜா)
நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கியதாக 1300 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பின் பிரகாரம், நான்கில் ஒருபகுதியினர் அரச சேவையைப் பெற்றுக்கொள்வதற்கு அல்லது அதனைத் துரிதப்படுத்துவதற்கு இலஞ்சம் வழங்குவதாகக் கூறியிருக்கும் அதேவேளை அரச அதிகாரிகளினால் அரசசேவைகள் வழங்கப்படும் போது அதற்குப் பிரதிபலனாகப் பாலியல் இலஞ்சம் கோரப்படும் நிலை காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இலங்கையின் 9 மாகாணங்களையும் ஒருங்கிணைத்து கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து இவ்வருடம் ஏப்ரல் மாதம் வரையான காலப்பகுதியில் 18–80 வயது வரையான 1300 பிரஜைகளிடம் ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட இலஞ்சம், ஊழல் அனுபவம் தொடர்பான கருத்துக்கணிப்பு தொடர்பான இறுதி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதுகுறித்துத் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று நேற்று திங்கட்கிழமை கொழும்பிலுள்ள ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அந்த சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. அங்கு மேலும் தெரிவிக்கப்பட்டதாவது,
ஊழல் காரணமாக தனிநபர் ஒருவரின் வாழ்க்கை எவ்வாறு பாதிப்படைகின்றது என்பதை சுட்டிக்காட்டுவதுடன், தேசிய மட்டத்தில் ஊழலை இல்லாதொழிப்பதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் நோக்காகக் கொண்டே இலஞ்சம் ஊழல் அனுபவம் தொடர்பில் மக்கள் மத்தியில் இக்கருத்துக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் நாட்டுமக்கள் நீதித்துறை, அரசாங்கம் மற்றும் பொலிஸ் ஆகியவற்றில் எந்தக் கட்டமைப்பைப் பெரிதும் நம்புகின்றார்கள் என்ற கேள்விக்கு கருத்துக்கணிப்பு முடிவுகளின் பிரகாரம் 73 சதவீதமானோர் நீதிமன்றத்தின் மீது பெரிதும் நம்பிக்கை கொண்டிருப்பதுடன், அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை 47 சதவீதமாகவும், பொலிஸார் மீதான நம்பிக்கை 57 சதவீதமாகவும் அமைந்திருக்கின்றது.
அதேவேளை இக்கருத்துக் கணிப்புக்கு உட்படுத்தப்பட்டவர்களில் நான்கில் ஒருபகுதி மக்கள், தாம் அரசசேவையைப் பெற்றுக்கொள்வதற்கு அல்லது அதனைத் துரிதப்படுத்துவதற்கு இலஞ்சம் வழங்குவதாக ஏற்றுக்கொண்டுள்ளனர். எனினும் அவர்களில் மூன்றிலொரு பிரிவினர் இவ்வாறு இலஞ்சம் வழங்குவது ஏற்புடையதல்ல என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நாட்டின் 9 மாகாணங்களையும் உள்ளடக்கியதாக 1300 பேரிடம் மேற்கொள்ளப் பட்ட கருத்துக்கணிப்பில் பதிலளித்தவர்களில் அரைப்பங்கினர் ஊழல் மற்றும் இலஞ்சத்தின் ஒரு வடிவமாக பாலியல் இலஞ்சமும் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர். அரச அதிகாரிகளினால் அரசசேவை கள் வழங்கப்படும் போது அதற்குப் பிரதி பலனாகப் பாலியல் இலஞ்சம் கோரப்படும் நிலை காணப்படுகின்றது. பாலியல் இலஞ் சம் கோரப்படும் நிலைமையானது கிராமப்புறங்களை விடவும் நகர்ப்புறங்களில் அதிகமாக உள்ளபோதிலும் அதனால் தோட்டப்புற மக்களே இலகுவில் பாதிப்படையக் கூடியவர்களாக இருக்கின்றனர் என்று கருத் துக்கணிப்பு முடிவுகள் வெளிப்படுத்தியுள் ளன. மேலும் இக்கருத்துக்கணிப்புக்கு உட்படுத்தப்பட்டவர்களில் 86 சதவீமானோர் இலங்கையில் இலஞ்சம், ஊழல் தொடர்பான குற்றங்களை விசாரிப்பதற்கென ஆணைக்குழுவொன்று இயங்குகின்றது என்பதை அறிந்திருக்கின்ற போதிலும் 72 சதவீதமானோர் இக்குற்றங்கள் குறித்து முறையிடக்கூடிய பொறிமுறை பற்றிய தெளிவற்றவர்களாகவே உள்ளனர்.
இந்நிலையில் இக்கருத்துக்கணிப்பு முடிவு கள் இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டிய தேவை யொன்றையும் அதற்கான சந்தர்ப்பத்தை யும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது என்று நேற்றைய தினம் நடைபெற்ற செய்தியா ளர் சந்திப்பில் ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர் நெஷனல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அசோக ஒபேசேகர சுட்டிக்காட் டினார்.
அதேவேளை அரசாங்கமும் பொலிஸா ரும் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற் படுத்தக்கூடிய விதமாக செயற்பட வேண் டும் என்று வலியுறுத்திய அவர், பாலியல் இலஞ்சம் தொடர்பான ஆபத்தான நிலை யையும் கட்டுப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டார். மேலும் இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதன் செயற்பாடு களை விரைவுபடுத்த வேண்டியதன் அவ சியத்தையும் வலியுறுத்தினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM