முஸ்லிம்களுக்கான அரசியலின் வீழ்ச்சி !

09 Dec, 2019 | 04:47 PM
image

தனித்­துவம், உரிமை, இனத்­துவ அடை­யாளம் என்று பேசிப் பேசியே முஸ்லிம் அர­சியல் ஒரு முட்டுச் சந்தில் கொண்டு வந்து நிறுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது. முஸ்லிம் கட்­சி­களின் அர­சியல் முஸ்லிம் மக்­க­ளுக்­கான அர­சி­ய­லாக இல்­லாமல் போனதே இதற்கு முழு­முதற் கார­ண­மாகும். முஸ்லிம் கட்­சிகள் எனும் போது, முஸ்லிம் தலை­மை­களின் கட்­டுப்­பாட்­டி­லுள்ள எந்­தக்­ கட்சியும் அதற்கு விதி­வி­லக்­கல்ல.

உண்­மைக்­குண்­மை­யாக முஸ்லிம் சமூ­கத்­திற்கு அவ­சி­ய­மான அர­சியல் கலா­சாரம் ஒன்று இல்­லாமல் போன­தற்கு முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள், அவர்­க­ளுக்குப் பின்னால் உள்ள இணைப்­பா­ளர்கள், அமைப்­பா­ளர்கள், அமைச்சின் கீழி­யங்­கிய நிறு­வனத் தலை­வர்கள், உள்­ளூ­ராட்சிமன்றப் பிர­தி­நி­திகள், பிர­தேச முக்­கி­யஸ்­தர்கள் எல்­லோ­ருமே வித்­திட்­டி­ருக்­கின்­றார்கள்.

அது­மட்­டு­மன்றி, முஸ்லிம் அர­சி­யல் ­வா­தி­களும் சமூ­கத்­திற்­கான அர­சி­யலும் சீர்­கெட்டு நாசமாய்ப் போவதை பார்த்தும் பார்க்­கா­தது போல் அல்­லது ‘நமக்கேன் வீண் வம்பு, நாம் சொல்லி கேட்­கவா போகின்­றார்கள்’ என்ற எண்­ணத்தில் வாழா­வி­ருந்த புத்­தி­ ஜீ­விகள், வைத்­தி­யர்கள், சட்­டத்­த­ர­ணிகள் மற்றும் தொழில்­வாண்­மை­யா­ளர்கள், பள்­ளி­வாசல் நிர்­வா­கத்­தினர், சமா­தான நீத­வா­னுக்­கா­கவும், பொன்­னா­டை­க­ளுக்­கா­கவும் அலைந்து திரிந்து கொண்டு ‘சமூக ஆர்­வலர்’ என்று தம்மை தாமே அழைத்துக் கொண்டு திரி­ப­வர்கள், பல்­க­லைக்­க­ழக முஸ்லிம் மாண­வர்கள், விரி­வு­ரை­யா­ளர்கள் போன்ற அனை­வரும் இதற்கு வகை சொல்ல வேண்டும்.

விசே­ட­மாக, தமது அர­சியல் தலை­வர்­களை நிதா­ன­மாக, நடு­நி­லை­யாக நின்று நோக்­காமல், அவர்­க­ளது சரியை சரி எனவும் பிழையை பிழை எனவும் கூற திரா­ணி­யற்­ற­வர்­க­ளாக, மந்­தி­ரித்து விடப்­பட்ட மந்­தைகள் போல இருக்­கின்ற கட்சி ஆத­ர­வா­ளர்கள், அர­சியல் போராட்டம் என்றால் என்­ன­வென்றே தெரி­யாமல் சமூக வலைத்­த­ளங்­களில் ஒரு குறிப்­பிட்ட கட்­சிக்கு வக்­கா­ளத்து வாங்கும் பேஸ்புக் போரா­ளிகள், வீராப்புப் பேச்­சுக்­க­ளையும் உணர்ச்­சி ­க­ர­மான உரை­க­ளையும் பாடல்­க­ளையும் கேட்டு தமது ஆத­ரவு யாருக்­கென தீர்­மா­னிக்கின்ற முஸ்லிம் மக்­களும் இதற்கு பொறுப்­பா­ளி­கள்தாம்.

தெரிந்து ஏமாற்­றப்­படல்

ஜப்­பானில் உற்­பத்தி செய்­யப்­பட்­டது என்று நம்பி, சீனத் தயா­ரிப்பை வாங்­கினால் அது அதன் வேலையைக் காட்­டியே தீரும் என்­பார்கள். இங்கு, சீனத் தயா­ரிப்­புக்­களை விற்­பனை செய்­ப­வர்­களை விட சீன உற்­பத்­தி­களை “ஒரி­ஜினல் ஜப்பான்” என்று கூறி ஏமாற்றி விற்­பனை செய்­ப­வர்­கள்தான் மிக ஆபத்­தா­ன­வர்கள். முஸ்லிம் அர­சி­யலில் 98 சத­வீ­த­மானோர் இந்த இரண்டாம் வகையைச் சேர்ந்த அர­சி­யல்­வாதிகள் தான்.

எனவே, போலி பொருட்­களை ஒரி­ஜினல் பொருட்கள் என்று நினைத்தும் நீடித்து நிலைத்­தி­ருக்கும் என்று நம்­பியும் கொள்­வ­னவு செய்து விட்டு, பின்னர் பொருளில் மாத்­திரம் குற்றம் சொல்லிக் கொண்­டி­ருக்க முடி­யாது. அது­போல, சமூக அக்­க­றை­யுள்ள, ஒழுக்க விழு­மி­யங்கள் கொண்ட, தீயபழக்­கங்கள் இல்­லாத, பணத்­திற்கும் பத­விக்கும் பின்னால் அலை­யாத, தைரி­ய­முள்ள, சூடு சொர­ணை­யுள்ள ஒரு அர­சி­யல்­வா­தியை தமது பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக, தலை­வ­ராக முஸ்லிம் சமூகம் தெரிவு செய்­யாமல், எல்லாம் பிழைத்துப் போன பிறகு அர­சி­யல்­வா­தி­களை மட்டும் குற்றம் சொல்­வதில் அர்த்தமில்லை.

தனது பிள்ளை சந்­தோ­ஷ­மாக வாழ வேண்டும் என எதிர்­பார்க்கும் ஒரு தந்தை கேடு­கெட்ட ஒரு­வனை திரு­மணம் முடித்துக் கொடுப்­ப­வ­ராக இருக்க முடி­யாது. அது­போல, பிழை­யான தெரிவை மேற்­கொண்டு விட்டு சரி­யான பிர­தி­ப­லன்­களை எதிர்­பார்க்க முடி­யாது என்ற அடிப்­ப­டையில், சித்­த­சு­வா­தீ­ன­முள்ள ஒவ்­வொரு முஸ்லிம் பொது மக­னுக்கும், முஸ்­லிம்­க­ளுக்­கான அர­சியல் பிழைத்துப் போனதில் பங்­கி­ருக்­கின்­றது என்­பதை நினைவிற் கொள்ள வேண்டும்.

தனித்­துவ அடை­யாளம்

முஸ்லிம் தனித்­துவ அடை­யாள சிந்­த­னையின் தந்­தை­யாக எம்.ஐ.எம்.முஹி­தீனை குறிப்­பி­டலாம். மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் மற்றும் சேகு இஸ்­ஸதீன் போன்ற பலர் ஒன்­றி­ணைந்து அந்த சிந்­த­னையை மிக நுட்­ப­மாக அர­சியல் மயப்­ப­டுத்­தி­னார்கள் எனலாம். தனித்­துவ அடை­யாள சிந்­த­னையின் முதற்­கட்ட வெற்­றிக்கு 1990 இற்கு முன்னர் முஸ்லிம் காங்­கி­ரஸில் இணைந்து செயற்­பட்ட அர­சி­யல்­வா­திகள் மற்றும் ஆளு­மை­களின் பங்கு முக்கி­ய­மா­ன­தாகும்.

முன்­ன­தாக, இலங்­கையில் முஸ்­லிம்கள் பெருந்­தே­சி­யத்­துடன் இணைந்து அர­சியல் செய்­தனர். இன்னும் இந்தப் பண்பு இணக்க அர­சி­ய­லூ­டாக பிர­தி­ப­லிக்­கின்­றது. பின்னர் தமிழர் அர­சி­ய­லுடன் இணைந்து பய­ணித்­தனர். ஆனால், இன்­னு­மொரு இனத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்­டி­யங்கும் அர­சியல் அணியிலிருந்து கொண்டு முஸ்லிம் சமூ­கத்தின் தனித்­துவத் தன்­மையை பாது­காப்­பதும் அபி­லா­ஷை­களை வென்­றெ­டுப்­பதும் கல்லில் நார் உரிக்­கின்ற வேலை என்­பதை அஷ்ரப் போன்­ற­வர்கள் உணர்ந்­தனர்.

இந்தக் காலப்­ப­கு­தி­யில் தான் கிழக்கில் ஆயுத இயக்­கங்கள் பெரு­வ­ளர்ச்­சி­ய­டையத் தொடங்­கி­யி­ருந்­தன. எனவே, முஸ்லிம் இளை­ஞர்கள் ஆயு­தங்­களில் நம்­பிக்கை வைத்து, வழி­கெட்டுப் போய்­வி­டாமல் தடுக்க வேண்­டிய பொறுப்பும் தமக்­கி­ருப்­பதை பெருந்­த­லைவர் அஷ்ரப் உணர்ந்து கொண்டார். இவ்­வா­றான கார­ணங்­களை பிர­தான வினை­யூக்­கி­யாகக் கொண்டே தனித்­துவ அடை­யாள அர­சியல் கோட்­பாடு வலு­வ­டைந்­தது. அதன் வெளிப்­பா­டுதான் முஸ்லிம் காங்­கிரஸ் கட்­சி­யாகும்.

இலங்கை முஸ்­லிம்கள் சிங்­கள மக்­க­ளோடும் தமிழ் சமூ­கத்­தோடும் பின்­னிப்­பி­ணைந்து வாழ்ந்­தாலும் ஏனைய இனங்­களைப் போலவே அவர்­க­ளுக்­கென்று சில தனி­யான இலட்­ச­ணங்கள் இருக்­கின்­றன. அவர்கள் இஸ்­லா­மியத் தமி­ழர்­களோ, அல்­லது நையாண்­டி­யாக சொல்­லப்­படும் சொல்­வ­ழக்­கினால் அழைக்­கப்­படும் சமூ­கமோ அல்லர்.

முஸ்­லிம்கள் ஒரு தனி­யான மத, இன அடை­யா­ளத்தைக் கொண்­ட­வர்கள் என்­ப­துடன், சரி­யாக கட்­ட­மைக்­கப்­பட வேண்­டிய ஒரு தேசி­யமும் ஆகும். எனவே, இவ்­வா­றான கார­ணங்­களால் தனித்­து­வ­மான வழியில் அர­சி­யலை முன்­கொண்டு செல்­வதன் மூலமே முஸ்லிம் சமூ­கத்தின் பிரத்­தி­யேக விவ­கா­ரங்­களை சரி­யாகக் கையா­ளலாம் என்­பது அன்­றைய அர­சியல் முன்­னோ­டி­களின் கணிப்­பாக இருந்­தது.

பேரம்­பேசல் சாத­னைகள்

இந்தப் பின்­ன­ணியில் உரு­வாகி வளர்ச்சி பெற்ற முஸ்லிம் காங்­கிரஸ் என்ற அர­சியல் இயக்­கத்தைப் பயன்­ப­டுத்தி ஸ்தாபக தலைவர் பல விட­யங்­களைச் சாதித்தார். அவ­ரிலும் தவ­றுகள் இருந்­தன என்­றாலும், இன்­றி­ருக்­கின்ற அர­சியல் தலை­வர்­க­ளை­யெல்லாம் விட அவர் எவ்­வ­ளவோ பர­வா­யில்லை என்­ப­தற்கு நாமே சாட்­சி­யா­ளர்கள்.

அவர் ஒரு பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக இருந்­தது 11 வரு­டங்­கள்தான். இதில் 6 வரு­டங்கள் மாத்­தி­ரமே அவ­ருக்கு அமைச்சர் பதவி கிடைத்­தது. இன்­றி­ருக்­கின்ற பல அர­சி­யல்

­வா­தி­க­ளுக்கு பதவி கிடைத்த காலத்தை விட இது மிகக் குறு­கிய கால­மாகும். இந்தக் காலப்­ப­கு­தியில் அவர் செய்த சேவை­களை இன்றும் நாம் பார்த்து வியக்­கு­ம­ள­வுக்கு உள்­ளன. அவர் வெறு­மனே ஆயிரம் விளக்­குடன் ‘ஆதவன் எழுந்து வந்தான்’ என்று பாட்டை போட்டு விட்டு, இந்த சமூ­கத்தை இருட்­டுக்குள் விட்டுச் செல்­ல­வில்லை. முடி­யு­மான இடங்­க­ளி­லெல்லாம் அவர் விளக்­கேற்றி வைத்தார்.

பிரே­ம­தா­ஸவு­ட­னான பேரம்­பேசல் மூலம் பிர­தி­நி­தித்­துவத் தெரி­வுக்­கான வெட்­டுப்­புள்­ளியை குறைத்­தது மட்­டு­மன்றி, சமூ­கத்­திற்கு நீண்­ட­கால அடிப்­ப­டையில் பய­ன­ளிக்கக் கூடிய மாபெரும் அபி­வி­ருத்தித் திட்­டங்­க­ளையும் நடை­மு­றைப்­ப­டுத்­தினார். ஆயி­ரக்­க­ணக்­கான முஸ்லிம், தமிழ், சிங்­கள இளை­ஞர்­க­ளுக்கு தொழில்­வாய்ப்­புக்­களை வழங்­கினார். சுருங்கக் கூறின், மக்­களில் ஒரு­வ­ராக இருந்து பிரச்­சி­னை­களை அணுகும் ஒரு தலை­வ­ராக அஷ்ரப் இருந்­த­மை­யால்தான், முஸ்லிம் மக்­களால் பெரிதும் நேசிக்­கப்­ப­டு­கின்றார்.

முஸ்­லிம்கள் தனித்­து­வ­மா­ன­வர்கள் என்­பதை போலவே அவர்­க­ளது அர­சியல் அபி­லா­ஷை­களும், வழி­மு­றை­களும் தனித்­து­வ­மா­னவை என்­பதை எம்.எச்.எம்.அஷ்ரப் உரைக்க வேண்­டிய விதத்தில் உரைப்­ப­தற்­காக கட்­சியை பயன்­ப­டுத்­தினார்.  

சம­கா­லத்­தி­லேயே தனித்­துவ அடை­யாள அர­சி­யலின் ஊடாக முஸ்லிம் சமூ­கத்தின் உரி­மைகள், அபி­லா­ஷை­க­ளுக்­காக குரல்­கொடுத்துக் கொண்டும், பெருந்­தே­சி­யத்­து­ட­னான இணக்க அர­சியல் மூலம் தான் சார்ந்த சமூ­கத்­திற்கு இந்­த­ள­வுக்கு சேவை­யாற்றிக் கொண்டும் வாழ்ந்த ஒரு முஸ்லிம் அர­சி­யல்­வாதி அதற்கு முன்­னரும் - பின்­னரும் யாரும் இல்லை எனலாம்.

திசை­மா­றிய கட்­சிகள்

அவ­ரது மறை­வுக்குப் பின்னர் முஸ்லிம் தனித்­துவ அடை­யாள அர­சி­யலின் தலை­வி­தியே மாறிப் போனது. இனி­வரும் காலங்­களில் தனித்­துவ அடை­யா­ளத்தை வேறு ஒரு வழித்­த­டத்தில் முன்­கொண்டு செல்ல வேண்டும் என்று சிந்­தித்தே தேசிய ஐக்­கிய முன்­ன­ணியை அஷ்ரப் ஆரம்­பித்தார் என்­பது உண்­மை­யென்றால், அதன் தாற்­ப­ரி­யத்தைக் கூட அவ­ரது சிஷ்­யர்கள் பலர் புரிந்து கொள்­ள­வில்லை.  

தந்­தையின் கையைப் பிடித்துக் கொண்டு நடந்­து­வந்த பிள்­ளைகள் அவ­ரது மறை­வுக்குப் பிறகு போவ­தற்கு வழி தெரி­யாமல், ஆளுக்­கொரு திசையில் பய­ணிக்கத் தொடங்­கினர். ‘இதுதான் தனித்­துவப் பாதை’ என்று அவர்கள் எல்­லோ­ருமே ஒற்­றை­யடிப் பாதை­களைச் சொன்­ன­துதான் இதில் விசித்திர­மாகும்.

முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வ­ராக பத­விக்கு வந்த ரவூப் ஹக்கீம் நினைத்­த­துதான் தனித்­துவம் என்­றா­னது. அதே­வேளை, புதுப்­புது ‘காங்­கி­ரஸ்­களை’ உரு­வாக்­கி­ய­வர்­களும் அஷ்­ரபின் பெயரைச் சொல்லி இன்­று­ வ­ரையும் காலத்தை ஓட்டிக் கொண்­டி­ருக்­கின்ற அர­சி­யல்­வா­தி­களும் ‘தனித்­துவ அடை­யாள அர­சியல்’ அல்­லது ‘முஸ்­லிம்­க­ளுக்­கான அர­சியல்’ என்­பதன் அர்த்­தத்­தையே தமக்கு ஏற்­றாற்போல் மாற்­றி­ விட்­டார்கள் என்­றுதான் சொல்ல வேண்­டி­யி­ருக்­கின்­றது.

ஆகவே, சரி­யான தனித்­துவ அடை­யாள அர­சியல் எவ்­வாறு இருக்க வேண்டும் என்ற புரிதல் இன்­றியும், அதன் தாற்­ப­ரி­யத்தை உண­ரா­மலும், சமூக அக்­கறை இன்­றியும், முஸ்லிம் கட்­சிகள் மற்றும் அந்தக் கோட்­பாட்டை பின்­பற்­றிய அர­சி­யல்­வா­திகள் செயற்­பட்­ட­மையால், தனித்­துவ அடை­யாள அர­சியல் சோபை இழந்து கன­கா­ல­ மா­யிற்று. இன்று பெரும் வீழ்ச்­சி­யுடன் தோல்விப் பாதையில் பய­ணித்துக் கொண்­டி­ருப்­ப­தா­கவே கருத வேண்­டி­யுள்­ளது.

முகவர் அர­சியல்

முஸ்லிம் கட்சி ஒன்று தனித்­துவத் தன்­மை­யுடன் செயற்­ப­டு­வ­தோடு, தமது சமூ­கத்தின் அடை­யாள அர­சி­யலை முன்­கொண்டு சென்­ற­வாறு, பேரம்­பேசும் ஆற்­றலை பயன்­ப­டுத்­து­வ­தற்­கா­கவே, இந்த கோட்­பாட்டின் அடிப்­ப­டை­யி­லேயே முஸ்லிம் காங்­கி­ரஸூம் பின்­வந்த முஸ்லிம் கட்­சி­களும் உரு­வாக்­கப்­பட்­டன  பெருந்­தே­சியக் கட்­சி­களில் நேர­டி­யாகச் சங்­க­ம­மாகி இருந்த முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் செய்ய முடி­யாத காரி­யங்­களைச் செய்­வ­தற்­கா­கவே தனிக் கட்சி ஒன்று அவ­சி­ய­மாக இருந்­தது.

ஆனால், என்ன நடந்­தது என்­பது நமக்குத் தெரியும். இன்று எல்லா முஸ்லிம் கட்­சி­களும் தனித்­துவ முஸ்லிம் அடை­யாள அர­சி­யலின் தன்­மையை இழந்­தி­ருக்­கின்­றன. பெரும்­பான்மைக் கட்­சி­களின் கிளைக் கட்­சிகள் போலவே அநேக கட்­சி­களின் செயற்­பா­டுகள் அமைந்­துள்­ளன.

இந்தப் பின்­ன­ணியில், அஷ்­ரபின் மர­ணத்­திற்குப் பின்­ன­ரான கடந்த 20 வருட காலத்தில் இணக்க அர­சியல், பேரம்­பேசும் சக்தி என்­ப­வற்றின் ஊடாக பெரி­தாக எதையும் சாதிக்க முடி­யாமல் போயி­ருக்­கின்­றது. அபி­வி­ருத்தி அர­சி­யலில் பாராட்­டத்­தக்க அனு­கூ­லங்­களை இணக்க அர­சியல் ஊடாக முஸ்லிம் சமூகம் பெற்றுக் கொள்ள முடிந்தாலும், உரிமை சார்ந்த விட­யங்கள் இன்னும் அஷ்ரப் விட்டுச் சென்ற இடத்­தி­லேயே நிற்­கின்­றன.

இதை செய்­வ­தற்கு தனித்­துவ அடை­யாள அர­சியல் என்ற கோட்­பாடும் இத்­தனை கட்­சி­களும் முஸ்லிம் விடு­தலைக் கோஷமும் தேவை­யில்லை. இதை­விட சிறந்த சேவை­களை பெருந்­தே­சியக் கட்­சி­களில் இருந்த மூத்த முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­களே சத்­த­மின்றி செய்­து­ விட்டுப் போயி­ருக்­கின்­றார்கள் என்­பதை நினை­விற்­கொள்ள வேண்டும்.

இதே­வேளை, தனித்­துவ அடை­யாள அர­சி­யலோ அல்­லது முஸ்­லிம்­க­ளுக்­கான அர­சி­யலோ எது­வா­கினும் அது முஸ்லிம் சமூ­கத்தின் தனித்­து­வ­மான அர­சியல் கலா­சா­ரத்தை பிர­தி­ப­லித்துக் கொண்டு, முஸ்­லிம்­களின் பிரத்­தி­யேக பிரச்­சி­னை­களை ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கும் ஏனைய சமூக மக்­க­ளுக்கும் எடுத்­து­ரைப்­ப­தற்­கான கரு­வியே என்ற தெளிவு சில முஸ்லிம் அர­சியல் தலை­வர்­க­ளுக்கு மிகக் குறை­வாக உள்­ளது. இதனால் பல குழப்­பங்கள் ஏற்­பட்­டுள்­ளன.

இதன் விளை­வாக தனித்­துவம் பேசி எது­வுமே சாதிக்க கையா­லா­காத முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­களின் உணர்ச்சிப் பேச்­சுக்­களும், தவ­றான வியூ­கங்­களும் முஸ்லிம் சமூ­கத்தை சிங்­கள மக்­க­ளி­ட­மி­ருந்து தூர­மாக்கி தனி­மைப்­ப­டுத்தும் அறி­கு­றி­க­ளாக தென்­ப­டு­கின்­றன. ‘தமக்கு எல்லாம் தெரியும்’ என்ற முட்­டாள்­த­ன­மான மன­நி­லையில் அநே­க­மான அர­சியல் வாதிகள் இருப்­பதும், அவர்­களை வாக்­கா­ளர்கள் கண்­மூ­டித்­த­ன­மாக ஆத­ரிப்­பதும் இதற்கு கார­ண­மாகும்.

இறங்­கு­முகம்

இந்­நி­லையில், அனைத்து முஸ்லிம் கட்­சி­க­ளி­னதும் சமூ­கம்­சார்ந்த அடை­யாள அர­சியல் வீழ்ச்சி கண்­டுள்­ளது. தேர்­தலில் வாக்­குகள் கூடலாம் குறை­யலாம். ஆனால் 1990களின் இறுதிப் பகு­தியில் முஸ்லிம் மக்­களின் மனங்­களில் மு.கா. இருந்த இடத்தில் இப்­போது எந்தக் கட்­சியும் இல்லை. இதனால், ஒட்­டு­மொத்­த­மாக உண்­மைக்­குண்­மை­யாக முஸ்­லிம்­க­ளுக்­கான அர­சியல் இறங்கு முகமாகச் சென்று கொண்டிருக்கின்றது. இந்த பின்னடைவு, நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளோடு சம்பந்தப்பட்டதல்ல. நாட்பட்ட வீழ்ச்சியின் விளைவாகும். இதை பலர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

உடனடியாக நாளையோ நாளை மறுதினம் தேர்தல் ஒன்று நடைபெற்றால், அதில் எந்தப் பிரசாரமும் செய்யக்கூடாது என்று ஒரு நிபந்தனை விதிக்கப்பட்டு, வாக்கெடுப்பு நடைபெற்றால் பல முஸ்லிம் கட்சிகளின் வாக்கு வங்கிகளில் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதைக் காணலாம். அதுமட்டுமன்றி, இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் முஸ்லிம் கட்சிகள் மற்றும் பெரும்பான்மைக் கட்சிகளில் அங்கம் வகிக்கும் தற்போதைய முஸ்லிம் எம்.பிகள் தோல்வியடையப் போகின்றார்கள். இதிலிருந்தும் இவ்வீழ்ச்சியை பட்டவர்த்தனமாக அறியலாம்.

எனவே, தனித்துவ அடையாள அரசியல் உருக்குலைந்தது மட்டுமன்றி, முஸ்லிம் சமூகத்திற்கான அரசியலும் கிட்டத்தட்ட தோல்வி கண்டிருக்கின்றது என்றுதான் சொல்ல வேண்டும். இந்த வீழ்ச்சிக்கு முஸ்லிம் மக்கள் உள்ளடங்கலாக, கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட சமூகத்தின் ஒவ்வொரு தரப்பினரும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பங்காளிகள் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

உண்மையிலேயே, நாம் வீழ்ச்சியடைகின்றோம், தோல்வியடைகின்றோம் என்பதை விடவும் அதை உணராமல் இருப்பதுதான் ஒரு சமூகத்திற்கு பெரும் தண்டனை என்பதை முஸ்லிம் சமூகம் நினைவிற் கொள்வது நல்லது.  

- ஏ.எல்.நிப்றாஸ்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04