தற்போது மழையுடன் கூடிய காலநிலை நிலவுவதினால், ஆபத்தான நீர் நிலைகளில் நீராடுவதை இளைஞர்கள் தவிர்க்க வேண்டும் என, உயிர் பாதுகாப்புப் பிரிவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீர் நிலைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால், பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் நீர் நிலைகளில் நீராடுவதைத் தவிர்க்க வேண்டும் எனக்கேட்டுள்ளனர்.
இது தொடர்பிலான அறிவித்தல்களை நாடளாவிய ரீதியிலுள்ள அப்பகுதி பிரதேச பொலிஸ் நிலையங்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் விடுத்துள்ளனர்.
நாட்டின் பல பாகங்களிலும் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகின்றது. இதனால், தாழ் நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
அத்துடன், ஆழம்மிக்க கடல் பகுதிகள், ஆறுகள் மற்றும் குளங்களில் நீராடிய பலர் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
மழை வெள்ளம் காரணமாக முதலைகள், விஷப்பாம்புகள் மற்றும் ஏனைய ஜந்துக்களின் நடமாட்டமும் அதிகரித்துள்ளன. இக்காலப்பகுதியில் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்துக் கொள்வதுடன், ஆபத்தான நீர் நிலைகளில் நீராடுவதையும் இயன்றளவு தவிர்த்துக் கொள்ளுமாறு அவ்வப்பகுதி பிரதேச பொலிஸாரால் கேட்கப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM