(ஆர்.யசி)
ஜனாதிபதி தேர்தலில் சுதந்திர கட்சி தனித்து பயணித்திருந்தால் கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகியிருக்க மாட்டார் என்கிறார் அமைச்சர் மஹிந்த அமரவீர.
ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கோத்தாபய ராஜபக்ஷவுடன் இணைந்ததாலேயே அவர் வெற்றி பெற்றார். தேர்தலில் நாம் தனித்து பயணித்திருந்தால் கோத்தாபய ராஜபக்ஷ வெற்றிபெற்றிருக்க மாட்டார் என்கிறார் அமைச்சர் மஹிந்த அமரவீர. பொதுத் தேர்தலிலும் கூட்டணியாக பயணிப்போம் எனவும் அவர் கூறினார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கூட்டணி குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஒரு சிலர் விமர்சனக் கருத்துகளை முன்வைத்து வருகின்ற நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நிலைப்பாடு குறித்து வினவிய போதே அவர் இதனைக் கூறினார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்.
ஸ்ரீலங்கா சுதந்தர கட்சி கடந்த காலங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கீழ் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்தது. ஐக்கிய தேசிய கட்சியின் தனித் தீர்மானம் ஒன்றினை முன்னெடுக்கும் நகர்வுகளை நாம் தடுத்தோம்.
அதேபோல் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இம்முறை ஜனாதிபதி தேர்தலில் மிகவும் முக்கியமான தீர்மானம் எடுத்தது.
அதுவே ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ வெற்றி பெறவும் எதுவாக அமைந்தது. இம்முறை ஜனாதிபதி தேர்தலில் கோத்தாபய ராஜபக்ஷ 13 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு 14 இலட்சம் வாக்குகள் கிடைத்தது. இம்முறை தேர்தலில் அது முழுமையாக எமக்கு கிடைத்திருக்கும் என கூற முடியாது, ஆனால் எமது ஆதரவு வாக்குகளே ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை வெற்றிபெறச் செய்தது என்பது உண்மையான கூற்று.
ஒருவேளை நாம் இந்த தேர்தலில் தனித்த பயணம் ஒன்றினை முன்னெடுத்திருந்தால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆதரவை கோத்தாபய ராஜபக்ஷவிற்கு வழங்காது இருந்திருந்தால் அவர் இந்த தேர்தலில் வெற்றி பெற்றிருக்க மாட்டார்.
அது அவருக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் நன்றாகவே தெரியும். அவர்கள் இன்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆதரவை அங்கீகரித்து செயற்பட்டு வருகின்றனர். எனினும் ஒரு சிலர் தமது அரசியல் நோக்கங்களுக்காக எம்மை விமர்சித்து வருகின்றனர்.
எவ்வாறு இருப்பினும் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலிலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மிகவும் முக்கியமான பணிகளை முன்னெடுக்கும்.
தேர்தலில் வெற்றியினை பெற்றுக்கொண்டு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பலமான அரசாங்கம் ஒன்றினை நாம் உருவாக்குவோம்.
இப்போதுள்ள நிலையில் ஐக்கிய தேசிய கட்சி எமக்கு சவாலான கட்சியாக இல்லை. அவர்களின் தலைமைத்துவ பலவீனம், ஆசன மோதல்கள் காரணமாக மக்கள் முழுமையாக அவர்களை நிராகரிக்கும் நடவடிக்கைகலையே முன்னெடுப்பார்கள் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM