சுவிஸ் தூதரக ஊழியர் கடத்தல் சம்பவம் பொய்யானது என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன : எஸ்.பி.திஸாநாயக்க 

Published By: R. Kalaichelvan

08 Dec, 2019 | 04:37 PM
image

(எம்.மனோசித்ரா)

இலங்கையிலுள்ள சுவிஸ் தூதரகத்தில் பணியாற்றிய இலங்கை பெண் ஊழியர் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பொய்யானது என்பதை நிரூபிப்பபதற்கான பல ஆதரங்கள் அரசாங்கத்துக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக காணி மற்றும் காணி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.

சுவிஸ் தூதரக பெண் ஊழியர் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் கூறினார். 

அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில், 

இலங்கையிலுள்ள சுவிஸ் தூதரகத்தில் பணியாற்றிய இலங்கை பெண் ஊழியர் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பொய்யானது என்பதை நிரூபிப்பபதற்கான பல ஆதரங்கள் அரசாங்கத்திற்கு கிடைக்கப் பெற்றுள்ளன.

கிடைத்துள்ள ஆதரங்களின் அடிப்படையில் குறித்த பெண்னுக்கு எவ்வித பிரச்சினைகளும் ஏற்படவில்லை என்பது தெளிவாகிறது. 

அவர் யாராலும் கடத்தப்படவுமில்லை. வேறு ஏதேனுமொரு நோக்கத்துக்காக அந்த பெண் ஊழியர் கடத்தப்பட்டதாகக் கூறி சிறப்பானதொரு நாடகம் அரங்கேற்றப்பட்டிருக்கிறது. இவற்றை தெளிவுபடுத்தும் போதுமானளவு சாட்சிகள் அரசாங்கத்துக்கு கிடைக்கப் பெற்றிருக்கின்றன. 

தூதரக ஊழியர் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் இடத்தில் குறித்த நேரத்தில் எவ்வித சம்பவங்களும் பதிவாகவில்லை. அவர் சென்ற இடம், இறங்கிய இடம் , மீண்டும் வந்த இடம் தொடர்பான அனைத்து தகவல்களும் படங்களுடனும், காணொளிகளுடனும் ஆதாரங்களாகக் இரகசிய பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்றுள்ளன. 

இவ்வாறு கிடைக்கப் பெற்றுள்ள ஆதாரங்களைத் தாண்டி குறித்த பெண் ஊழியருக்கு ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெற்றிருந்தால் அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அவர் நேரடியாக பொலிஸாரிடம் சாட்சியமளிப்பதே ஒரே வழியாகும். 

எவ்வாறிருப்பினும் சுவிஸ் தூதரகத்தின் இந்த செயற்பாட்டால் புதிய அரசாங்கத்துக்கும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கும் அவ பெயரை ஏற்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது தெளிவாகிறது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19