(ஆர்.ராம்)
இலங்கை ஆட்சியாளர்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் எவ்வாறாவது பாதுகாக்கப்பட்டாலும் போர் குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலை செய்யாத வரையில் குற்றச்சாட்டுக்கள் கறைபடிந்த நிழலாக இலங்கையைத் தொடரும் என்று இந்திய இராணுவத்தின் ஓய்வு நிலை மூத்த அதிகாரியான கேர்ணல் ஆர். ஹரிகரன் விரகேசரிக்கு தொலைபேசி மூலம் வழங்கிய விசேட செவ்வியின்போது தெரிவித்தார்.
இறுதிப்போரின் பின்னர் தற்போயை புதிய ஜனாதிபதி, இராணுவத்தளபதி, பாதுகாப்புச் செயலாளர், உள்ளிட்டவர்கள் ஐக்கிய நாடுகள் மீது மனித உரிமை பேரவை உட்பட சர்வதேச ரீதியாக குற்றச்சாட்டுக்கள் காணப்படுகின்றன.
இவை எதிர்காலத்தில் இலங்கையின் மீது சர்வதேச நாடுகளின் அழுத்தங்களுக்கு காரணமாக அமையும் என்று கருதுகின்றீர்களா என்று எழுப்பிய வினாவுக்கு பதிலளித்த அவர், ஈழப்போர் சார்ந்த மனித உரிமை குற்றங்களுக்கு இலங்கை பொறுப்புடன் நடவடிக்கை எடுக்கும் வரையில் சர்வதேச நாடுகளின் அழுத்தங்கள் தொடரும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அவ்வாறான அழுத்தங்களை இலங்கை தவிர்க்க முடியாது.
அதற்கு உலக அளவில் பல்வேறு உதாரணங்களைக் கூற முடியும். ஐக்கிய நாடுகள் சபையில், வட கொரியா, சூடான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் இடம்பெற்ற பல்வேறு மனித உரிமை குற்றங்களுக்கு சரியான பதிலளிக்காததால் அவற்றின் மீது சுமத்தப் பட்ட பொருளாதர மற்றும் ஏற்றுமதி இறக்குமதி தடைகள் பல ஆண்டுகளாக நிடிக்கின்றமையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார்.
ஆத்துடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை நிராகரிக்கப்போவதாக புதிய ஆட்சியாளர்கள் தெரிவித்துள்ள நிலையில் போரின் போது இடம்பெற்ற மீறல்களுக்கான பொறுப்புக்கூறல், நீதிவழங்கள், இராணுவத்தின் மீதான குற்றச்சாட்டுக்கள் ஆகியவை தொடர்பிலான விடயங்களுக்கு என்னவாகும்?
இந்த விடயங்களில் கரிசனை கொண்டிருக்கும் இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் நடவடிக்கை எடுக்கும் என்று நம்பிக்கை கொள்ள முடியுமா என்று வினவியபோது, தற்போதுள்ள உலக பாதுகாப்பு சூழலில் சர்வதேச நாடுகள், இலங்கையின் போர்குற்றம் சார்ந்த விடயங்களில் கரிசனத்துடன் செயல்படும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. இருந்தாலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இந்த விடயம் 2020 மார்ச்சில் விவாதத்திற்கு வரும் போது இலங்கையின் மெத்தனப் போக்கு கடுமையாக விமர்சிக்கப்படும். ஆனால் அது விமர்சனத்துடனேயே நின்றுவிடும்.
இலங்கைக்கு சீனாவின் ஒத்துழைப்பு இருக்கும் வரை, இலங்கையால் அவ்வாறான விமர்சனங்களுக்கு முகங்கொடுகக்கவும், அதுசார்ந்த நடவடிக்கைகளை ஓரளவு முன்னெடுக்கவும் முடியும். ஏனெனில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தற்போது அமெரிக்கா அங்கம் வகிக்கவில்லை. இதனால் சீனாவை திட்ட வட்டமாக எதிர்க்க முடியாத நிலைமை உள்ளது. அத்துடன் அங்கத்துவத்தினைக் கொண்டுள்ள ஏனைய நாடுகள் பல சீனாவுக்கு கடன்களைப் பெற்று கடமைப்பட்டவையாக உள்ளன.
ஆகவே அந்நாடுகள் மாறுபட்ட நிலைப்பாடுகளை எடுத்தால் அவற்றுக்கு எதிராக சீனா அழுத்தம் கொடுக்கத் தயங்கப்போவதில்லை. எவ்வாறு இலங்கை ஆட்சியாளர்கள் பாதுகாக்கப்பட்டாலும் போர் குற்றங்களுக்கான பொறுப்புக்கான பொறுப்புக்கூறலை செய்யாத வரையில் சர்வதேச ரீதியாக இந்த விடயம் கறைபடிந்த நிழலாக இலங்கையைத் தொடரும். அவ்வாறான நிலைமையொன்று தேவையா என்று கோத்தாபய தலைமையிலான புதிய அரசு சிந்திக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM