சிவனொளிபாதமலைக்கான யாத்திரை பருவகாலம் டிசம்பர் 11 ஆம் திகதியுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சூழல் மாசு கருதி நல்லத்தண்ணி வர்த்தக சங்கம் பல விதிமுறைகளை நடைமறைப்படுத்தவுள்ளது. இதனையடுத்து யாத்திரிகர்களுக்கு பொலித்தீன் பாவனை முற்றாக தடைச்செய்யப்பட்டுள்ளது.
இதற்கு மாற்றீடாக யாத்திரிகர்களுக்கென இலவசமாக பயணப்பையை வழங்குவதுடன், பயண முடிவில் அந்த பையை திருப்பி கொடுத்து செல்லவும் இச்சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இரவு நேரங்களில் யாத்திரிகர்கள் செல்லும் வழியில் மின்சார வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மேலும், பாதுகாப்புக்கருதி சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தவும் புகையிரத மார்க்கமாக வருகை தரும் யாத்திரிகர்களின் நலன்கருதி ஹட்டன் புகையிரத நிலையத்திலிருந்து நல்லத்தண்ணிர் நகரம் வரை விசேட பஸ் சேவையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நல்லத்தண்ணிர் மலையடிவாரத்தில் அமைக்கப்படவுள்ள பொலிஸ் நிலையத்திற்கு மேலதிகமாக சீத்தக்குவ, ஊசி மலையுச்சி முதலிய இடங்களிலும் தற்காலிக பொலிஸ் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.
சிவனொளிபாதமலை யாத்திரையின் ஆரம்பமானது டிசம்பர் 9 ஆம் திகதி பெல்மதுமளை கல்பொத்தாவெல ரஜமகா விகாரையில் வழிபாடுகளுடன் நடைபெறவுள்ளது, இதனை தொடர்ந்து, 11 ஆம் திகதி சமன் பூஜை வழிபாட்டு பொருட்களும்,பெல்மதுளை ரஜமகா விகாரையிலிருந்து விக்கிரங்கங்களும் ஊர்வலமாக எடுத்து செல்லப்படவுள்ளது.
ஆறுமாதங்கள் தொடரவுள்ள சிவனொளிபாதமலை யாத்திரை பருவகாலம் 2020ஆம் ஆண்டு மே மாதம் வெசாக் போயாதினத்துடன் நிறைவு பெறுகின்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM