கிளிநொச்சியில் மழையால் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு : பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின

Published By: R. Kalaichelvan

06 Dec, 2019 | 09:06 PM
image

கிளிநொச்சியில் நேற்றிரவு முதல் இன்று  காலை வரை பெய்த கனமழைக் காரணமாக மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தில் 6841 குடும்பங்களை சேர்ந்த 22262 பேர் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலைய புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.

வெள்ளத்தினால் மூழ்கியுள்ள பகுதிகளில் சிக்கியிருந்த பொது  மக்களை நேற்றிரவு முதல் படையினர் மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றிருந்தனர்.

அத்தோடு க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் சில பரீட்சை நிலையங்களுக்கு   செல்ல முடியாத நிலை காணப்பட்டது. அவ்வாறான இடங்களிலும் படையினர் படகுகள் மூலம் மாணவர்களை பரீட்சை மண்டபங்களுக்கு கொண்டு சென்றுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய நான்கு பிரதேச செயலக பிரிவுகளிலும் மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்படுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதிக்கப்பட்டவர்களில் 21 பாதுகாப்பு அமைவிடங்களில் 920 குடும்பங்களை சேர்ந்த 20906 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலைய புள்ளி விபரம் தெரிவிக்கின்றன. கிளிநொச்சி மாவட்டத்தில் 37 வீடுகள் பகுதியளவில் சேதமாகியுள்ளதாகவும் அப்புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது.

கரைச்சி பிரதேச செயலர் பிரிவில் 3147 குடும்பங்களை சேர்ந்த 10220 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.

இவர்களில் 6 பாதுகாப்பான அமைவிடங்களில் 182 குடும்பங்களை சேர்ந்த 628 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 27 வீடுகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அப்புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.

கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் 3317 குடும்பங்களை சேர்ந்த 10967 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 பாதுகாப்பான அமைவிடங்களில் 714 குடும்பங்களை சேர்ந்த 2209 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இப்பிரதேசத்தில் 8 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளது.

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவில் 252 குடும்பங்களை சேர்ந்த 731 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1 பாதுகாப்பான அமைவிடத்தில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பூநகரி பிரதேச செயலர் பிரிவில் 125 குடும்பங்களை சேர்ந்த 344 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு பாதுகாப்பான அமைவிடத்தில் 23 குடும்பங்களை சேர்ந்த 64 புர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 02 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அப்புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது.

முகாம்களில் தங்கியுள்ள மக்களிற்கான சுகாதாரம் மற்றும் உணவு உள்ளிட்டவை மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையத்தினால் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41