நாட்டை மோசமான நிலைக்குத் தள்ளும் ரணில் மைத்திரி கூட்டணி

Published By: Ponmalar

01 Jun, 2016 | 07:07 PM
image

(ஆர்.யசி)

நல்லாட்சி என்ற பெயரில் மக்களின் பணத்தை கொள்ளையடிக்கும் ரணில்-மைத்திரி ஆட்சி நல்லாட்சி அல்ல. இதுவரை காலம் இருந்த ஆட்சிகளை விடவும் மிகவும் மோசமான நிலைமைக்கு இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூட்டணி செல்கின்றது என மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது. 

கூட்டணி சேர்ந்து குறுகிய காலத்தில் இவர்கள் மிகப்பெரிய மோசடிக்காரர்கள் என்பதை நிரூபித்துள்ளனர். நாட்டில் நல்லாட்சி  பாதையை பலப்படுத்துவதாக கூறிக்கொண்டு நாட்டை சீரழிக்கும் பாதையில் கொண்டு செல்கின்றனர் எனவும் மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்தது. 

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

நல்லாட்சியை பலப்படுத்துவோம் என்ற பிரதான காரணியை அடிப்படையாக வைத்து மக்களுக்கு நம்பிக்கை கொடுத்தே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. ஏனெனில் நடைமுறையில் இருந்த அரசாங்கம் மோசமாக இருந்த நிலையில்  இவர்கள் நல்லிணக்கம் என்ற கதைகளை கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்தனர்.  மோசமான குற்றங்கள், தவறுகள் அனைத்தும் இந்த ஆட்சியில் சரிசெய்யப்படும் என நாம் நம்பினோம். அதேபோல் கடந்த காலத்தில் இருந்த பொருளாதார நிலைமைகள், வறுமை என்ற நிலைமையில் இருந்து மாறும் எனவும் நம்பினோம். எனினும் இப்போது நிலைமை இருந்ததை விடவும் மோசமாகியுள்ளது. முன்னைய நிலைமையை விடவும் இருமடங்கு ஊழல் மோசடிகள் இந்த ஆட்சியிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என இவர் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21