கிளிநொச்சி, ஸ்கந்தபுரம் மணியகுளத்தை பாதுகாக்கும் முயற்சியில் பொதுமக்கள் ஈடுப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக சிறிய குளமான மணியம்குளத்திற்கு அதிகளவு நீர் வருகை ஏற்பட்டு அணைக்கட்டுக்கு மேலாக நீர் வழிந்தோட ஆரம்பித்துள்ளது.
இந் நிலைமையானது மிகவும் ஆபத்தானதுடன் அணைக்கட்டுக்கு மேலாக நீர் பாய்ந்தோடினால் அணைக்கட்டை உடைத்துவிடும் என்ற நிலையில் குறித்த கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஒன்றிணைந்து மண் மூடைகளை அடுக்கி நீர் வழிந்தோடும் பகுதிகளை தற்காலிகமாக தடுத்துள்ளனர்.
மணியம்குளத்திற்கு கீழ் பகுதியில் மணியம்குளத்தைச் சேர்ந்த 140 குடும்பங்களும், விநாயகபுரத்தைச் சேர்ந்த 130 குடும்பங்களும் வாழ்கின்றனர்.
இதில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக விநாயகபுரத்தைச் சேர்ந்த பெரும்பாலான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
எனவே மணியம்குளத்தின் நிலைமைகளை கருதி அதன் கீழ் வாழுகின்ற பொது மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM