கையடக்கதொலைபேசியில் செல்பி எடுப்பதாக ஏமாற்றி மனைவியை ஆற்றில் தள்ளி கொன்ற கணவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்தியாவில் உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்த அஃப்டாப் என்பவர், தனது மனைவி ஆயிஷாவை வர தட்சணை கேட்டு கொடுமை செய்து வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் பணம் இனிமேல் கிடைக்காது என்று தெரிந்ததும், ஆயிஷாவை கொலை செய்ய திட்டமிட்ட அஃப்டாப், மனைவியிடம் சூட்சுமமாக பேசி, அன்பாக இருப்பதை போல நடித்துள்ளார்.
கங்கை ஆற்றுக்கு மனைவியை கூட்டி சென்ற அஃப்டாப், அதன் முன் நின்று செல்பி எடுக்கலாம் என்று கூறியுள்ளார். கணவன் கூப்பிட்டதால் ஆசையாக சென்று செல்பிக்கு போஸ் கொடுத்துள்ளார் ஆயிஷா.
இதையடுத்து, எதிர்பாராத நேரத்தில் ஆயிஷாவை ஆற்றில் தள்ளி கொலை செய்துள்ளார் அஃப்டாப். இதுகுறித்து ஆயிஷாவின் சகோதரர் அளித்த புகாரின் அடிப்படையில், அஃப்டாபை கைது செய்துள்ள பொலிஸார்அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதலில் பொலிஸாரை திசை திருப்பும் வகையில் கதை கட்டியுள்ளார் அஃப்டாப். எங்களிடம் சிலர் கொள்ளை அடிக்க முயன்றனர். அப்போது, எனது மனைவியை அவர்கள் ஆற்றினுள் தள்ளி விட்டனர் என பொலிஸாரிடம் அஃப்டாப் கூறினார்.
ஆனால் ஆயிஷாவின் அண்ணன் தனக்கு அஃப்டாப் மீதுதான் சந்தேகம் இருப்பதாக உறுதியாக கூறியதை தொடர்ந்து, பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் கொலை செய்ததை அஃப்டாப் ஒப்புக்கொண்டார். ஆற்றினுள் இருந்து ஆயிஷாவின் சடலத்தை மீட்டுள்ள பொலிஸார் மேலதிக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM