இந்தியாவில் சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா தனி நாடு அறிவித்து, கொடி, துறைகள் ஆகியவற்றையும் அறிவித்துள்ளார்.
நித்யானந்தா தொடர்ந்து தலைமறைவாக இருக்கிறார். அவர் உள்நாட்டில் இருக்கிறாரா? வெளிநாடு தப்பிச் சென்றுவிட்டாரா என்பதுகூட உறுதியாகத் தெரியவில்லை.
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு மாணவிகளை கடத்தி சென்றதாக அவர்களின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அவர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அகமதாபாத் டெல்லி பப்ளிக் பள்ளி வளாகத்தில் இருந்த அவரது ஆசிரமம் மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவர் இந்துக்களுக்கு என்று தனி நாடு ஒன்றை உருவாக்கிவிட்டதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்று பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
தென்-அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈக்வடார் அருகே ஒரு தீவை விலைக்கு வாங்கி எல்லைகள் அற்ற, நாடுகள் அற்ற, விர்ச்சுவல் இந்து நாட்டைக் கட்டமைக்கும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளார் நித்யானந்தா.
தனது கனடா நாட்டு சீடரான சாரா லாண்ட்ரியிடம் தனிப்பட்ட முறையில் பேஸ்புக் மெசஞ்சரில் உரையாடிய நித்யானந்தா, வத்திக்கான் போல குட்டி நாட்டை அமைக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
நித்யானந்தா கட்டமைக்கும் அந்த நாட்டிற்கு நித்யானந்தா கைலாசா என்று பெயர் வைத்துள்ளார்.
kailaasa.org என்ற இணையதளத்தில் தனது நாடு குறித்த தகவல்களை நித்யானந்தா வெளியிட்டு உள்ளார். நாட்டின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* கைலாசத்தில் பின்பற்றப்படும் அதிகாரப்பூர்வ மொழிகள் ஆங்கிலம், சமஸ்கிருதம் மற்றும் தமிழ்.
* 10 கோடி ஆதி சைவர்களின் மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. 200 கோடி இந்துக்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
* தெற்காசியாவில் 56 அசல் வேத நாடுகளையும், உலகளாவிய இந்து புலம்பெயர்ந்தோரையும் கொண்டுள்ளது.
* கைலாசா கடவுசீட்டை வைத்திருப்பவர் பதினொரு பரிமாணங்களிலும், கைலாசா உட்பட பதினான்கு உலகங்களிலும் இலவசமாக அனுமதிக்கப்படுவார்கள்.
* சுகாதாரத்துறை, மாநிலத் துறை, தொழில்நுட்பத் துறை, அறிவொளி பெற்ற நாகரீகத் துறை, கல்வித் துறை, மனித சேவைகள் துறை, வீட்டுவசதித் துறை, வர்த்தகத் துறை, கருவூலத் துறை என 10 துறைகள் உள்ளன.
* ஒவ்வொரு நாட்டை போலவே ஒரு பல்கலைக்கழகம் இருப்பதாகக் இணையதளம் கூறுகிறது.
* சொந்த தொலைக்காட்சி அலைவரிசை மற்றும் ஒரு நித்யானந்தா டைம்ஸ் பத்திரிக்கை உள்ளது.
* கைலாசா நாட்டில் உலகளாவிய இலவச சுகாதாரம், இலவச கல்வி, இலவச உணவு மற்றும் கோயில் சார்ந்த வாழ்க்கை முறையின் மறுமலர்ச்சி ஆகியவற்றைக் கொடுக்கிறது.
* ரிஷபா த்வாஜா - கைலாசாவின் கொடி நந்தியுடன் நித்தியானந்தாவைக் கொண்டுள்ளது. கொடியை டவுன்லோடு செய்து கொள்ள இணையதளம் பயனர்களை ஊக்குவிக்கிறது.
* கைலாசாவின் தேசிய விலங்கு நந்தி (புனித காளை).
* கைலாசாவின் தேசிய பறவை நாகம் - தங்க நிறமுடைய பறவை ஆகும் இரண்டு உயர்த்தப்பட்ட இறக்கைகள், இரண்டு சிவப்பு கண்கள், நான்கு கால்கள் தரையில் தொடும் சிங்கத்தின் வடிவத்தில், நான்கு கால்கள் நகங்களால் மேல்நோக்கி, மற்றும் ஒரு விலங்கு வாலுடன் இருக்கும்.
* நாட்டின் சின்னம் பரமசிவன், பராசக்தி, நித்யானந்தா மற்றும் நந்தி.
* கைலாசா ஒரு இந்து முதலீடு, ரிசர்வ் வங்கி, கிரிப்டோகரன்சி ஏற்றுக்கொள்ளப்படும், எதிர்காலத்தில் ஒரு 'தர்ம பொருளாதாரம்' ஏற்படுத்தப்படும்.
* நாட்டின் தேசிய மலர் தாமரை
* கைலாசாவின் தேசிய மரம் ஆலமரம்
இவர், தமிழ்நாட்டின், திருவண்ணாமலையில் ராஜசேகரன் என்ற பெயரில் பிறந்து வளர்ந்தவர். பெங்களூர் அடுத்த பிடதியில் உள்ள ஆசிரமும் மூலம் ஆயிரக்கணக்கான பக்தர்களைப் பெற்றவர் இவர். தமிழ்த் திரையுலகின் பிரபல நடிகையுடன் படுக்கையறையில் இவர் இருப்பதைக் காட்டும் வீடியோ பதிவுகள் வெளியாகி, அது தொலைக்காட்சிகளிலும் காட்டப்பட்ட நிலையில் இவர் சர்ச்சைக்குரிய பிம்பமாக உருவெடுத்தார்.
பிறந்த ஊரான திருவண்ணாமலையில் மட்டுமல்லாமல் பல இடங்களில் இவருக்கு ஆசிரமம் இருக்கிறது. இவருக்கு எதிராக பாலியல் புகார்களும் விசாரிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM