சிம்பாப்வேயின் முன்னாள் சர்வாதிகாரியான ரொபேர்ட் முகாபே கடந்த செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி தனது 95 ஆவது வயதில் சுகவீனமுற்ற நிலையில் சிங்கப்பூரில் மரணமானமை அனைவரும் அறிந்ததாகும்.
இதன்போது அவர் 7.7 மில்லியன் டொலர் பெறுமதியான பணத்தையும் பல சொத்துக்களையும் 10 கார்களையும் விட்டுச் சென்று ள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அநேகமான சொத்துகள் அவரது பெயரில் இல்லை எனவும் அந்தச் சொத்துகள் தொடர்பில் அவர் உயில் எதனையும் எழுதி வைத்து விட்டுச் செல்லவில்லை எனவும் அவரது சட்டத்தரணிகள் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை கூறியதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. 2001ஆம் ஆண்டு கசிந்த தரவுகளின் பிரகாரம் முகாபேயிடம் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சொத்து கள் இருப்பதாக கருதப்பட்டது.
இந்நிலையில் முகாபேயின் மகனான பொனா சிகோவோர் தனது தந்தையின் சொத்துகளை பதிவுசெய்வதற்கு உயர் நீதிமன்றத்திற்கு மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த சொத்துகளில் உள்நாட்டு வங்கியிலிருந்த 7.7 மில்லியன் ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான பணம், ஹரேரே நகரிலிருந்த 4 வீடுகள், 10 கார்கள், ஒரு பண்ணை, கிராமப்புற வீடொன்று மற்றும் பழத்தோட்டமொன்று என்பன உள்ளடங்குகின்றன. அதேசமயம் முகாபே 2008ஆம் ஆண்டு தனது சர்ச்சைக்குரிய தேர்தலின்போது ஹொங்கொங்கில் 4 மில்லியன் ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான மாளிகையை வாங்கியிருந்தார். இந்நிலையில் முகாபேயின் பல சொத்துகள் அவரது பெயரில் இல்லாததாலும் அவை தொடர்பில் அவர் உயில் எதனையும் எழுதி வைக்காததாலும் அவருக்கு உரிமையானதாக கூறப்படும் பல மில்லியன் ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான சொத்துக்களை இனங்கண்டறிந்து உரிமைகோர முடியாத சிக்கல் நிலைக்கு அவரது குடும்பத்தினர் உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM