போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட மூவரை கடற்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட சுற்றி வளைப்பில் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர்கள் புத்தளம் - பாலாவிய உலுக்கபல்லம் பிரேதசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
அத்தோடு கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து 10 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 740 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த நபர்கள் தங்கியிருந்த வீட்டில் 102 கிராம் மற்றும் 500 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட நபர்கள் 26 , 30 வயதுடைய அதே பகுதியில் வசிப்பவர்கள் என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
எனினும் கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM