நுவரெலியாவில் ராகலை பகுதியில் மண்சரிவு எச்சரிக்கை விடுத்ததை அடுத்து அங்கிருந்து 10 குடும்பங்கள் நேற்றையதினம் (04.12.2019) வெளியேற்றப்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி மையம் நேற்று மண்சரிவு எச்சரிக்கை விடுத்திருந்ததுடன் அப் பகுதியில் வசிக்கும் மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு தெரிவித்திருந்தது.
அத்துடன், இரத்தினபுரி, பதுளை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்களை விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இன்றைய வானிலை முன்னறிவிப்பின் படி வடக்கு, கிழக்கு, வட மத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் 100 மில்லி மீற்றருக்கு அதிகமான மழை பெய்யும் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
மேலும், சப்ரகமுவ, தெற்கு மற்றும் மேற்கு மாகாணங்களிலும் பகலில் 75 முதல் 100 மில்லி மீற்றர் வரை மழை பெய்ய வாய்ப்புள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM