யாழ்ப்பாணம், சாவகச்சேரி பிரதேச சபைக்குட்பட்ட அல்லாரை – எருக்கலம்பிட்டி இந்து மயானத்துக்குச் செல்லும் பாதை அமைக்கப்படாததால் பெரும் சிரமங்களை எதிர்நோக்கவேண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அல்லாரை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்தோர் குறித்த இந்து மயானத்திலேயே சடலங்களைத் தகனம் செய்து வரும் நிலையில் சாவகச்சேரி பிரதேச சபை சுடலைக்கான பாதையை அமைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1996ஆம் ஆண்டு தொடக்கம் 2009ஆம் ஆண்டுவரை தமது இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த இந்த இந்துமயானம் பின்னர் விடுவிக்கப்பட்ட நிலையில் பாதை அமைக்கப்படவில்லை.
இதனால் மழைக் காலங்களில் சகதிக்குள்ளேயே இந்து மயானத்துக்குச் செல்லவேண்டியுள்ளது என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இந்து மயானம் அமைந்துள்ள வட்டாரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த தெரிவு உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் நியமன உறுப்பினரும் சாகவச்சேரி பிரதேச சபையில் உள்ளனர் என்றும் அந்தப் பகுதியைச் சேர்ந்தோர் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM