பொலிஸ் அதி­காரம் குறித்து மீள்­ப­ரி­சீ­லனை செய்­ய ­வேண்டும் - கெஹெ­லிய

Published By: Digital Desk 3

04 Dec, 2019 | 01:09 PM
image

(ரொபட் அன்­டனி)

அர­சி­ய­ல­மைப்பின் 13 ஆவது திருத்தச் சட்­டத்தில் காணப்­ப­டு­கின்ற பொலிஸ் அதி கா­ரங்கள் தொடர்­பாக மீள்பரி­சீ­லனை செய்­ய­வேண்டும் என்­பதே அர­சாங்­கத் தின் நிலைப்­பா­டாகும் என்று இராஜாங்க அமைச்சர் கெஹெ­லிய ரம்­புக்­வெல தெரி­வித்தார்.

மேலும்  முக்­கி­ய­மான காணி­களை வைத்­துக்­கொண்டு ஏனைய காணிகள்  தொடர்­பான அதி­கா­ரத்தை   மாகாண சபை­க­ளுக்கு வழங்­கலாம் அதில் பாரிய பிரச்­சி­னைகள் எதுவும் இல்லை  என்றும் அவர் குறிப்­பிட் டார்.

ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­ப­க் ஷவின் இந்­திய விஜ­யத்­தின்­போது அர­சி­ய­ல­மைப்பின்  13 ஆவது திருத்தச் சட்­டத்தை  அர­சாங்கம்  அமுல்­ப­டுத்­த­வேண்டும் என்று  இந்­திய   பிர­தமர்   நரேந்­திர  மோடி தெரி­ வித்­தி­ருந்தார். இந்­நி­லையில் இந்­திய ஊட கம் ஒன்­றுக்கு செவ்­வி­ய­ளித்த ஜனா­தி­பதி  கோத்­த­பாய  பொலிஸ் அதி­காரம் குறித்து சிந்­திக்­க­வேண்­டி­யுள்­ளது என்று குறிப்­பிட்­டி­ருந்தார். இது  தொடர்பில் அர­சாங்­கத்தின் நிலைப்­பாட்டை வின­வி­ய­போதே அவர் இவ்­வாறு கூறினார்.

அவர்  இது  தொடர்பில்  மேலும் குறிப்­பி­ டு­கையில்,

அர­சி­ய­ல­மைப்பின் 13 ஆவது திருத்தச் சட்­டத்தை அமுல்­ப­டுத்­த­வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் நாங்கள் இருக்­கின்றோம். 13 அவது திருத்தச் சட்டம் ஏற்­க­னவே  அர­சி­ய­ல­மைப்பில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளது. அது ஏற்­க­னவே அமுலில் தான் உள்­ளது.

ஆனால்  13 ஆவது திருத்­தச்­சட்­டத்தில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்ள  பொலிஸ் அதி­கா­ரத்தை வழங்­கு­வது  தொடர்பில் சிக்கல் நில­வு­கின்­றது.  இது தொடர்பில் ஆரம்­பத் தில் இருந்தே  பிரச்­சினை உள்­ளது.

எனவே தான்  பொலிஸ் அதி­காரம்  தொடர்பில் மீள் பரி­சீ­லனை செய்­வது  தொடர்­பாக ஆராய்ந்­து­வ­ரு­கின்றோம்.     அதனை எவ்­வாறு  முன்­னெ­டுப்­பது என்­பது குறித்து பார்க்­கின்றோம்.  அதா­வது பொலிஸ் அதி­கா­ரத்தில் சில   குறைந்­த­ள­வி­லான அதி­காரம் கொண்ட விட­யங்கள் குறித்து  பரி­சீ­லிக்­கலாம்.  போக்­கு­வ­ரத்து  விடயம் போன்­றன  தொடர்­பாக பரி­சீ­லிக்­கலாம்.

ஆனால்  முழு­மை­யான பொலிஸ் அதி­கா­ரத்தை வழங்­கு­வது  சிக்­க­லுக்­கு­ரி­யது. உதா­ர­ண­மாக வட  மாகா­ணத்­துக்கு  பொலிஸ் அதி­கா­ரத்தை கொடுத்தால்  மாகாண முத­ல­மைச்சர் பொலிஸ்  ஆணை­யா­ளரை நிய­மி்ப்பார். இந்த சூழலில்  மேல் மாகா­ணத்தில் தவறு செய்த ஒருவர்  வட மாகா­ணத்­துக்கு சென்­று­விட்டால்   மேல் மாகா­ணத்தில் உள்ள பொலிஸார்    குறித்த சந்­தேக நபரை  கைது செய்ய  வட மாகா­ணத்­துக்கு செல்­ல­வேண்டும். ஆனால் வட மாகாண பொலிஸ் ஆணை­யா­ளரின் அனு­ம­தி­யின்றி   மேல் மாகாண பொலி­ஸா­ரினால்  சந்­தேக நபரை கைது செய்ய முடி­யாத நிலை ஏற்­படும்.

இலங்கை போன்ற நாட்­டுக்கு இந்த நிலை பொருத்­த­மா­காது. அத­னால்தான் பொலிஸ் அதி­கா­ரங்­களை வழங்­கு­வது சிக்­க­லுக்­கு­ரி­யது என்று கூறு­கின்றோம்.

எனவே 13 ஆவது திருத்­தத்தில் உள்ள  பொலிஸ்  அதி­காரம் குறித்து மீள்பரிசீ லனை செய்யவேண்டும் என்பதே  அரசாங் கத்தின் நிலைப்பாடாகும். இதேவேளை காணி அதிகாரம் குறித்து பேசப்படுகின்றது.  முக்கியமான காணிகளை வைத்துக் கொண்டு ஏனைய காணிகள்  தொடர்பான அதிகாரத்தை   மாகாண சபைகளுக்கு வழங் கலாம் என்று எண்ணுகின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58