கடற்படை மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையின் போது வத்தளை பகுதியில் பாதுகாப்புப் படையினர் பயன்படுத்திய சீருடையுடன் ஒருவரை கைதுசெய்துள்ளனர்.
தேசிய பாதுகாப்புக்காக கடற்படை மற்றும் பொலிஸார் மேற்கொள்கின்ற கூட்டு நடவடிக்கைகளின் போதே வத்தளை பகுதியில் உள்ள வீதி சோதனை நடவடிக்கையின்போது, நிர்கொழும்பில் இருந்து கொழும்புக்கு பயணித்த சந்தேகத்திற்கிடமான லொறியொன்று வழிமறித்து சோதனைக்குட்படுத்தப்பட்டது.
இந்நிலையில் குறித்த லொறியில் இருந்து சிவில் பாதுகாப்பு படை வீரர்கள் பயன்படுத்திய சீருடைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது, லொறிச் சாரதி தெளிவான விளக்கங்களை வழங்கத் தவறிய நிலையில், சந்தேக நபரா லொறிச் சாரதி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டார்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நபர் கூடலுஒயா பகுதியில் வசிக்கும் 23 வயதுடையவரென பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதுடன் சம்பவம் குறித்து வத்தளை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM