நாட்டின் ஏற்றுமதி வருமானம் கடந்த வருடம் செப்டெம்பர் மாதத்தைவிட இவ்வருட செப்டெம்பரில் சிறியளவு வீழ்ச்சியை பதிவு செய்திருந்தாலும் கூட கடந்த வருட ஜனவரி மாதம் முதல் செப்டெம்பர் வரையிலான ஒன்பது மாதங்களில் ஒட்டுமொத்த ஏற்றுமதி வருமானத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருட செப்டெம்பர் வரையிலான ஒன்பது மாத காலப்பகுதியிலான மொத்த ஏற்றுமதி வருமானம் அதிகரித்துள்ளது.
2018ஆம் ஆண்டு செப்டெம்பர் மாத ஏற்றுமதி வருமானம் 1055 மில்லியன் அமெரிக்க டொலராகப் பதிவாகியிருந்தது. அந்த வருமானமானது இவ்வருட செப்டெம்பரில் 952 மில்லியன் அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது. அதன் அடிப்படையில் இவ்வருட செப்டெம்பர் மாத ஏற்றுமதி வருமானம் கடந்த வருடத்தை விட 103 மில்லியன் அமெரிக்க டொலரால் வீழ்ச்சியடைந்துள்ளது.
கடந்த வருட செப்டெம்பர் மாத ஏற்றுமதி வருமானத்தைவிட இவ்வருட ஏற்றுமதி வருமானம் வீழ்ச்சியடைந்துள்ள போதிலும் கடந்த வருடம் (2018) செப்டெம்பர் வரையிலான முதல் ஒன்பது மாத ஏற்றுமதி வருமானத்தைவிட இவ்வருட ஜனவரி முதல் செப்டெம்பர் வரையிலான ஒன்பது மாதகால மொத்த ஏற்றுமதி வருமானம் ஓரளவு அதிகரித்துள்ளது.
2018 செப்டெம்பர் வரையிலான முதல் ஒன்பது மாத கால ஏற்றுமதி வருமானம் 8898 மில்லியன் அமெரிக்க டொலராகப் பதிவாகியிருந்தது. இவ்வருட செப்டெம்பர் வரையிலான முதல் ஒன்பது மாதங்களுக்கான ஏற்றுமதி வருமானம் 8983 மில்லியன் அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது. அதனடிப்படையில் பார்க்கின்ற போது இவ்வருடம் முதல் ஒன்பது மாத கால ஏற்றுமதி வருமானம் 85 மில்லியன் அமெரிக்க டொலரால் அதிகரித்துள்ளது.
நாட்டின் இறக்குமதி செலவீனங்களிலும் சாதகமான ஒரு நிலையை அவதானிக்க முடிகிறது. 2018ஆம் ஆண்டு செப்டெம்பர் மாத இறக்குமதி செலவீனங்கள் 1768 மில்லியன் அமெரிக்க டொலராகக் காணப்பட்டது. இவ்வருட செப்டெம்பர் மாத இறக்குமதி செலவீனங்கள் 1711 மில்லியன் அமெரிக்க டொலராகப் பதிவாகி யுள்ளது. அதன் அடிப்படையில் பார்க்கின்ற போது இவ்வருட செப்டெம்பர் மாத இறக்குமதி செலவீனங்கள் 57 மில்லியன் அமெரிக்க டொலரால் வீழ்ச்சியடைந்துள்ளது.
இவ்வருட செப்டெம்பர் மாதத்தில் இறக்குமதி செலவீனங்களில் ஏற்பட்ட வீழ்ச்சியைப் போன்று கடந்த வருட செப்டெம்பர் வரையிலான முதல் ஒன்பது மாத கால இறக்குமதி செலவீனங்களை விட இவ்வருட செப்டெம்பர் வரையிலான முதல் ஒன்பது மாத கால இறக்குமதி செலவீனங்கள் பாரிய அளவு வீழ்ச்சியடைந்துள்ளன. இதனால் வர்த்தகப் பற்றாக்குறை குறைவடைந்துள்ளது.
2018ஆம் ஆண்டு ஜனவரி முதல் செப்டெம்பர் வரையிலான ஒன்பது மாத காலப் பகுதியில் மொத்த இறக்குமதி செலவீனமானது 16,851 மில்லியன் அமெரிக்க டொலராகக் காணப்பட்டது. இவ்வருடம் ஜனவரி முதல் செப்டெம்பர் வரையிலான ஒன்பது மாத கால இறக்குமதி செலவீனங்கள் 14,596 மில்லியன் அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது. அதன் அடிப்படையில் பார்க்கின்றபோது இவ்வருட முதல் ஒன்பது மாத கால இறக்குமதி செலவீனங்களில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அதாவது கடந்த வருடத்தைவிட 2255 மில்லியன் அமெரிக்க டொலர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
ஏற்றுமதி வருமானம் முதல் ஒன்பது மாத காலப் பகுதியில் ஓரளவு வளர்ச்சியைப் பதிவு செய்துள்ள அதேவேளை, இறக்குமதி செலவீனங்களிலும் முதல் 9 மாத காலப் பகுதியில் ஏற்பட்ட பாரிய வீழ்ச்சியானது கடந்த ஆண்டைவிட இவ்வாண்டு வர்த்தகப் பற்றாக்குறையை சுருக்கமடையச் செய்துள்ளது. இது ஆரோக்கியமானதொரு விடயமாகவே நோக்கப்படுகிறது.
இவ்வாறு ஏற்றுமதி வருமானத்தில் ஏற்பட்டுள்ள ஓரளவு அதிகரிப்பு மற்றும் இறக்குமதிச் செலவீனங்களில் ஏற்பட்டுள்ள பாரிய வீழ்ச்சி என்பன நாட்டிற்கு சாதகமான ஒரு சமிக்ஞையைக் காட்டினாலும்கூட கடந்த காலங்களில் சிறந்து விளங்கிய சுற்றுலாத் துறையூடான வருமானம் இவ்வருடம் பாரியளவு வீழ்ச்சியடைந்துள்ளது.
கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் சுற்றுலாத்துறையினூடாக 280 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானமாகப் பெறப்பட்டது. இவ்வருடம் செப்டெம்பர் மாதம் சுற்றுலாத்துறையூடாக 204 மில்லியன் டொலர் வருமானமாகப் பெறப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பார்க்கின்றபோது இவ்வருட செப்டெம்பர் மாத சுற்றுலா வருமானம் 76 மில்லியன் அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது. செப்டெம்பர் மாத வருமானம் மாத்திரமின்றி கடந்த வருட ஜனவரி முதல் செப்டெம்பர் மாதம் வரையிலான ஒன்பது மாத காலப்பகுதியில் பெறப்பட்ட சுற்றுலா வருமானத்தைவிட இவ்வருடம் செப்டெம்பர் வரையிலான சுற்றுலா வருமானம் பாரிய வீழ்ச்சியடைந்துள்ளது.
தகவல் மூலங்கள் - இலங்கை சுங்கம், இலங்கை மத்திய வங்கி
2018ஆம் ஆண்டு ஜனவரி முதல் செப்டெம்பர் வரையிலான ஒன்பது மாத காலப் பகுதியில் 3251 மில்லியன் அமெரிக்க டொலர் சுற்றுலாத்துறையினூடாக வருமானமாகப் பெறப்பட்டது. இவ்வருடம் செப்டெம்பர் வரையிலான ஒன்பது மாத காலப் பகுதியில் சுற்றுலாத் துறையினூடாக 2583 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானமாகப் பெறப்பட்டது. அதன் அடிப்படையில் பார்க்கின்றபோது கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் வரையிலான ஒன்பது மாத வருமானத்தை விட இவ்வருட செப்டெம்பர் மாதம் வரையிலான ஒன்பது மாத கால வருமானம் 668 மில்லியன் அமெரிக்க டொலரால் வீழ்ச்சியடைந்துள்ளது.
சுற்றுலாத்துறை வருமானத்தில் ஏற்பட்ட பாரிய வீழ்ச்சிக்கு கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற தீவிர வாத குண்டுத் தாக்குதல்களே காரணம் என்றாலும் அந்தத் தாக்கத்திலிருந்து சுற்றுலாத்துறை வழமைக்குத் திரும்பி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான நிலையில் கடந்த நவம்பர் 16ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக் ஷ வெற்றிபெற்றார். அதனைத் தொடர்ந்து அவர் சில அதிரடி நடவடிக்கைகளை ஆரம்பித்தார். ஜனாதிபதி செயலகத்தில் இருந்த 2500 ஊழியர்களின் தொகையை 500 வரை குறைத்தார். அரச நிறுவனங்களில் வைக்கப்படும் அரச தலைவர்களுடைய படங்களுக்குப் பதிலாக இலச்சினைகள் பொறித்த படங்களை மாத்திரம் பயன்படுத்துமாறு பணித்தார். இதன்மூலம் ரூ.100 மில்லியன் செலவைக் குறைத்துள்ளார்.
அதேபோன்று சோளம், குரக்கன், எள்ளு, பயறு மற்றும் மரமுந்திரிகை உள்ளிட்ட தேசிய உற்பத்திகளின் இறக்குமதியை எதிர் வரும் ஜனவரி மாதம் முதல் மட்டுப்படுத் துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அண்மையில் விவசாயத் திணைக்களம் தெரிவித்திருந்தது.
இவ்வாறு குறித்த உற்பத்தி வகைகளின் இறக்குமதிகளைக் கட்டுப்படுத்துவதுடன் உள்நாட்டில் உற்பத்தியை அதிகரிப்பதற் கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள் ளதாகவும் இதன்மூலம் உள்ளூர் விவசா யி கள் நன்மையடைவர் எனவும் விவசாயத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
உண்மையிலேயே இதுபோன்ற செயற்பா டுகள் வரவேற்கத்தக்கவை. என்றாலும் இன்னும் புதிய வகையான உபாய மார்க்கங் களைக் கண்டறிந்து ஏற்றுமதிகளை அதிகரித்து ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பதுடன் நேரடி முதலீடுகளையும் அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எம்.நேசமணி
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM