அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் போட்டியிலிருந்து இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்மணி கமலா ஹாரிஸ் விலகி இருக்கிறார்.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் பதவிக்காலம் 2020 ஆம் ஆண்டு இறுதியில் நிறைவடைகின்றது. இதையடுத்து, அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்கள் அடுத்த வருடம் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ளது.
இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் போட்டியிலிருந்து தமிழக வம்சாவளியை சேர்ந்த பெண்மணி கமலா ஹாரிஸ் விலகி இருக்கிறார்.
பிரச்சாரத்தை முடித்துக் கொள்கிறேன். ஆனால் நான் என்ன குறிக்கோளுக்காக இயங்கினேனோ அதற்காக தொடர்ந்து செயல்படுவேன். எனக்கு ஆதரவு அளித்தவர்களுக்கு நன்றி, என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரச்சாரம் செய்ய போதிய பணம் இல்லை என்று கூறி அவர் பதவி விலகி உள்ளார். அதில், நான் அனைத்து விதமாகவும் யோசித்து பார்த்தேன். கடந்த சில தினங்களாக எனக்கு தேர்தலில் செலவு செய்ய பணம் இல்லை. போதுமான பணம் இல்லாமல் பல பிரச்சினை வந்தது. நான் கோடீஸ்வரி கிடையாது. என்னால் அதிகம் செலவு செய்ய முடியாது.
எனக்கு யாரும் நிதி கொடுக்கவில்லை. அதனால் நான் இந்த தேர்தலில் இருந்து விலகிக் கொள்கிறேன். உங்களுக்கு எல்லாம் என்னுடைய நன்றிகள். உங்கள் ஆதரவு எனக்கு பெரிய அளவில் சக்தியை கொடுத்தது, என்று கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில்,கமலா ஹாரீஸை கடுமையாக விமர்சித்து வந்த ட்ரம்ப், இது குறித்து “நாங்கள் உங்களை மிஸ் பண்ணுவோம் “ என்று நக்கல் தொனியில் டுவிட் செய்திருந்தார்.
இதற்கு பதிலடி கொடுத்த கமலா, “கவலை வேண்டாம் அதிபரே, உங்களது விசாரணையில் சந்திப்போம்” என்று கூறியுள்ளார்.
அதிபர் பதவியை தவறாக பயன்படுத்தியதாக ட்ரம்ப் விசாரணையை சந்தித்து வரும் நிலையில், அதனை வைத்து கமலா பதிலடி கொடுத்துள்ளார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலாவின் தாயார் சியாமளா, சென்னையைச் சேர்ந்தவர். இவரது தந்தை ஜமைக்கா நாட்டைச் சேர்ந்தவர்.
இவர் அமெரிக்காவில் பிரதி சட்டமா அதிபர், சட்டமா அதிபர் பதவிகளில் வகித்து இருக்கிறார். ஜனநாயக கட்சியை சேர்ந்த இவர் 1990 இல் இருந்தே தீவிர அரசியலில் இருக்கிறார். கடந்த 2016 செனட்டர் தேர்தலில் வெற்றிபெற்றார். கலிபோர்னியாவின் செனட்டராக தற்போது இவர் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM