(ஆர்.யசி)
புதிய தேர்தல் சட்டம் குறித்தும் ஆராயவும் நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் குறித்து கட்சிகளிடையில் கலந்துரையாடல் ஒன்றினை முன்னெடுக்கும் வகையிலும் அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரியவிற்கு இடையிலான விசேட சந்திப்பொன்று நாளை தேர்தல்கள் திணைக்களத்தில் இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலை அடுத்து உடனடியாக பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்ற நிலைபாட்டில் ஜனாதிபதியும் ஆளும் கட்சியும் உள்ள நிலையில் மார்ச் மாதத்தின் பின்னர் தேர்தல் நடத்த முடியும் என்ற நிலைப்பாட்டில் தேர்தல்கள் ஆணைக்குழுவும் உள்ளது.
இந்நிலையில் பொதுத் தேர்தல் விடயங்கள் மற்றும் தேர்தல் சட்ட விதிமுறைகள் குறித்து ஆராயும் வகையில் நாளை காலை 10 மணிக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவில் அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரியவிற்கும் இடையில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.
அத்துடன் நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கட்சிகள் செலுத்திய கட்டுப்பணம் மற்றும் ஏனைய விடயங்கள் குறித்தும் இதன்போது ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கட்சியின் செயலாளர் பங்குகொள்ள முடியாது போனால் கண்டிப்பாக கட்சியை பிரதிநிதிதத்துவப்படுத்தும் வகையில் ஒரு உறுப்பினர் கலந்துகொள்ளுமாறும் தேர்தல் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM