மேட்டுப்பாளையத்தில் மழையால் வீடுகள் இடிந்து 17 பேர் உயிரிழப்பு நிகழ்ந்ததற்கு அரசின் அலட்சியம் தான் காரணம் என தி.மு.க. தலைவர் மு. க.. ஸ்டாலின் குற்றம்சாட்டியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் மேட்டுப்பாளையத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,
“தமிழக அரசு மற்றும் அமைச்சர்களின் அலட்சியத்தால் விபத்து ஏற்பட்டு, 17 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். அரசு உரிய நடவடிக்கை எடுத்திருந்தால், இவர்களின் உயிர் காப்பாற்றப்பட்டிருக்கும். உயிரிழந்தவர்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள 4 இலட்ச ரூபா நிதியுதவி போதாது. கூடுதல் நிதி உதவி வழங்க வேண்டும்.
இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். விபத்திற்கு காரணமான அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றார்.
முன்னதாக சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்ட ஸ்டாலின், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.
இதனிடையே அப்பகுதி மக்கள் சிதிலமடைந்து உடைந்து விழும் நிலையில் இருந்த அந்த சுற்றுச்சுவரை (80 அடி நீளம் 20 அடி உயரம் உள்ள அந்த சுற்று சுவரை) அகற்ற கோரி மக்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அந்த கோரிக்கை நிறைவேற்றப்படாததால் குறித்த விபத்து ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM