(எம்.ஆர்.எம்.வஸீம்)
ஆட்சிக்குவரும் பிரதான கட்சிகள் இரண்டும் கடந்தகால அரசாங்கங்களில் மோசடிகளில் ஈடுபட்டவர்களை பாதுகாத்தே வந்திருக்கின்றது. யாரையும் சிறைக்கு அனுப்பிய வரலாறு இல்லை. இந்த நிலை மாற்றப்படவேண்டும் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார்.
தற்போது ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ் பாராளுமன்றத்தை ஒரு மாதகாலத்துக்கு ஒத்திவைப்பதாக அறிவித்திருக்கின்றார். டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி பாராளுமன்ற அமர்வின்போது மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான கோப்குழுவின் விசாரணை அறிக்கையை சபைக்கு சமர்ப்பிப்பதாக கோப் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி ஏற்கனவே தெரிவித்திருந்தார். என்றாலும் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டதால் கோப்குழுவின் விசாரணை அறிக்கை செல்லுபடியற்றதாக மாறியுள்ளது.
எனவே இவ்வாறான நடவடிக்கைகள் காரணமாக மக்களின் பணம் வீண் விரயமாகுவதுடன் மோசடி காரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாத நிலையும் ஏற்படுகின்றது. இந்த நிலைமை மாற்றப்பட வேண்டும்.
அத்துடன் 19 ஆம் திருத்தம் இல்லாமலாக்கப்பட்டால் ஆணைக்ககுழுக்கள் அனைத்தும் செயலிழந்துவிடும் அபாயம் உள்ளதாகவும் அவர் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM