பாதாள உலக குழு நபர் புளுமெண்டல் சானகவிடம் இருந்து கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலையடுத்து ஐந்து பாதாள உலக குழு நபர்கள் ஆயுதங்களுடன் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரான 'தெமட்டகொட சமிந்த" உட்பட சிறைக்கைதிகளை ஏற்றிச் சென்ற சிறைச்சாலை பஸ் மீது கடந்த மார்ச் மாதம் 2 ஆம் திகதியன்று தெமட்டகொட பகுதியில் வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கம்பளை, நீர்கொழும்பு, கொச்சிகடை மற்றும் நாவுல ஆகிய பகுதிளைச் சேர்ந்த நபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து டீ56 ஆயுதங்கள், 9எம்எம் பிஸ்தோல் ரக துப்பாக்கிகள் இரண்டு, ஒரு ஸ்னைப்பர் துப்பாக்கி , 2500க்கும் மேற்பட்ட வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM