கோத்தபாய ராஜபக்ஷவின் வெற்றியின் பின்னர் தமிழ் மக்கள் காப்பாற்றப்பட்டனர்.
இலங்கை அரசியல் வரலாற்றில் முஸ்லிம்கள் இல்லாத அமைச்சரவையை அமைத்துள்ளமையால் முஸ்லிம் அரசியல்வாதிகள் அடங்கிபோயுள்ளனர் என்று தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டம், கல்முனை பகுதியில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் எதிர்கால திட்டம் குறித்து ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி முதல் 7 மணிவரை மக்கள் சந்திப்பு இடம்பெற்ற வேளையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
இலங்கை அரசியல் வரலாற்றில் முஸ்லிம்கள் இல்லாத அமைச்சரவையை அமைத்துள்ளமையால் முஸ்லிம் அரசியல்வாதிகள் அடங்கிபோயுள்ளனர்.
கடந்த பொதுத் தேர்தலில் தமிழ் மக்களை சிங்கள மக்கள் காப்பாற்றி விட்டனர். தமிழ் மக்கள் வெற்றி பெறவில்லை. கோத்தபாய ராஜபக் ஷவின் வெற்றியின் பின்னர் தமிழ் மக்கள் காப்பாற்றபட்டனர் என்றே சொல்ல வேண்டும். இது தமிழர்களுக்கு கிடைத்த பொற்காலம் ஆகும். மஹிந்த ராஜபக்ஷ ஒரு தமிழின பற்றாளர்.
வருகின்ற வாய்ப்புகளை தவறவிட்டு வரலாற்று தவறுகளை மீண்டும் செய்யக்கூடாது. இது நம்மை பின்னோக்கி நகர்த்தும் என கூற விரும்புகின்றேன்.
2010 ஆம் ஆண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு சரத் பொன்சேகாவிற்கு வாக்களிக்க மக்களை தூண்டியது. அன்று அரிய சந்தர்ப்பத்தில் தமிழர்கள் காப்பாற்றப்பட்டனர். சரத் பொன்சேகா வெற்றி பெற்றிருந்தால் முன்னாள் போராளிகள் அனைவரையும் காணமுடியாது போயிருக்கும். 30 வருட யுத்தத்தில் தமிழர்கள் அரசியல் மீது வெறுப்புற்றிருக்கின்றனர்.
திருமலை, அம்பாறை மக்களுக்கு அரசியல் தெளிவு வேண்டும். சர்கஸ் கயிற்றில் நடப்பது போன்றுதான் அம்பாறை தமிழர்களின் நிலையாகும். பிள்ளையான் முதலமைச்சராக இருந்த போது தமிழர்களுக்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப்பட்டிருந்தது.
கிழக்கு மாகாணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரஸுக்கு முட்டு கொடுத்ததனால் முதுகெலும்பில்லாத கிழக்கு மாகாண தமிழ் தேசிய கூட்டமைப்பின் அமைச்சர்கள் 90 வீதமான முஸ்லிம்களுக்கு வேலைவாய்ப்பினையும் தமிழர்களுக்கு 10 வீத வேலைவாய்ப்பினையும் வழங்கி தமிழர்களுக்கு துரோகம் செய்தனர்.
2009ஆம் ஆண்டு கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி கொடுப்பதற்கான இறுதிக்கட்ட வேலைப்பாடுகள் நடைபெற்றவேளை இடையில் புகுந்த ஹக்கீமும் ஹரிஸும் இடையில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட்டால் முஸ்லிம்கள் வாக்களிக்க மாட்டார்கள் என கூறி குழப்பிவிட்டனர். அடுத்த வாரம் என்னை மஹிந்த ராஜபக் ஷ கல்முனை விடயம் சம்பந்தமாக பேச அழைத்திருக்கிறார். பேசக்கூடிய நிலையில் இருக்கின்றோம். என்னுடைய சொந்த காணிக்கு அடுத்தவர்கள் வக்கீல் வைத்து வழக்கு பேசுவது போல் கல்முனை விடயத்தில் அனைவரும் மூக்கு நுழைக்க முற்படுகின்றனர்.
ஹரிஸ் எம்.பி. இப்போதுதான் அ, ஆ படிக்க தொடங்குகிறார். நாங்கள் தலைவர் பிரபாகரனுக்கு கீழ் பல்கலைக்கழகமே முடித்து விட்டோம். சாதாரண முஸ்லிம் மக்கள் எங்களுக்கு எதிரியல்ல, அடுத்த பொது தேர்தலில் முழு முஸ்லிம்களும் மாறி நின்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கு வாக்களிப்பார்கள். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது கொண்டு சென்ற 13 அம்ச கோரிக்கையை சஜித் பிரேமதாச தூக்கி எறிந்துவிட்டார். மூன்று தினங்கள் தூங்கி எழும்பிய பின்னர் சம்பந்தனும் சுமந்திரனும் தமிழ் மக்கள் சஜித் பிேரமதாசவை ஆதரிக்க வேண்டுமென தெரிவித்தனர்.
கோத்தபாய ராஜபக் ஷ வெற்றி பெற்ற பின்னர் சுமந்திரனும் கோடீஸ்வரனும் பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்து வருகின்றனர். இவர்கள் மஹிந்த ராஜபக் ஷவிடம் சென்றால் பிரதமர், அவர்கள் மீது செருப்பை கழற்றி வீசுவார். தற்போது அம்பாறை மாவட்டத்தில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி அனைத்து இடங்களிலும் கால்பதித்து வருகின்றது.
பொதுத்தேர்தலில் களமிறங்கி முயற்சி செய்தால் இரண்டு ஆசனங்களை பெற்றுக் கொள்ளலாம். இதன்மூலம் அம்பாறைக்கு ஒரு தமிழ் அமைச்சு கிடைக்கும். அப்போது தமிழர்களின் அபிவிருத்தியும் எமது கையில் அதிகாரமும் கிடைக்கும். இந்த நோக்கத்துக்காகவே சுதந்திர கட்சியின் பிரதித்தலைவர் பதவியை துறந்து மஹிந்தவிடம் கூறிவிட்டு வெளியேறினேன். அப்போதுதான் தமிழ் மக்களுக்கான பேரம் பேசும் சக்தியாக மாறமுடியும் என்ற நோக்கம் மாத்திரமே என்னிடம் உள் ளது என கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM