ஹொரன பிளான்டேசனுக்கு சொந்தமான ஓல்டன், ஸ்டொக்கம்,மஹாநிலு மற்றும் பெயார்லோன் போன்ற தோட்டங்களுக்கு இலத்திரனியல் தராசு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான முழுமையான தெளிவின்மையால் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை, நேற்று 2ஆம் திகதி தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளர் கணபதி நகுலேஸ்வரன் தலைமையில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிர்வாகப்பணிப்பாளர் அ.நந்தகுமார்,தொ.தே.சங்கத்தின் மாநில இயக்குநர்களான வீராசாமி,கனகராஜ்,ஜெயபாலன் மற்றும் அமைப்பாளர் பியோனிஸ் ஆகியோர் நேரடியாகக் களத்திற்குச் சென்று தொழிலாளர்களிடம் கலந்துரையாடி பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இவ்விடயம் தொடர்பாகத் தேசிய அமைப்பாளர் கூறுகையில்,
நவீன உலகிற்கு ஏற்ப நாமும் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் ஆனால் அம்மாற்றங்களினால் இதுவரை காணப்பட்ட சலுகைகள் மற்றும் வழங்கப்பட வேண்டிய வேதனங்களில் பாதிப்பு ஏற்பட முடியாது எனத் தெரிவித்ததோடு நவீன இலத்திரனியல் தராசு பற்றியும் தொழிலாளர்களுக்குத் தெளிவு படுத்தி குறிப்பிட்டதாகவும் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM