இந்தியாவின் இஸ்ரோ விண்வெளி ஆய்வு நிலையத்தால் கடந்த ஜூலை மாதம் 22 ஆம் திகதி நிலவை ஆய்வு செய்வதற்காக அனுப்பிவைக்கப்பட்ட சந்திராயன் 2- விண்கலத்தின் விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.
48 நாள் பயணமாக நிலவின் தென்துருவ பகுதியில் லேண்டரை தரை இறக்கும் முயற்சி கடந்த செப்டம்பர் மாதம் 7 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது. குறித்த லேண்டர் கருவிக்குள் இருக்கும் ரோவர் மூலம் 15 நாட்கள் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ள இந்தியாவின் இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டிருந்தனர்.
இது குறித்து தெரியவருவதாவது,
இந்தமாத தொடக்கத்தில் சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து லேண்டர் கருவி தனியாக பிரிந்ததுள்ளது.
சந்திராயன் - 2 விண்கலத்துடன் பொருத்தப்பட்ட லேண்டர் கருவிதான் நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்கு வடிவமைப்பட்டிருந்தது.
லேண்டர் கருவிக்குள் இருக்கும் ரோவர் மூலம் 15 நாட்கள் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ள இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டிருந்தனர்.
நிலவின் தென்துருவ பகுதியில் லேண்டரை தரை இறக்கும் முயற்சி கடந்த செப்டம்பர் மாதம் 7 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது.
விக்ரம் லேண்டர் நிலவின் தென்துருவ பகுதியில் இதுவரை எந்த நாடும் விண்கலத்தை தரை இறக்கியது இல்லை. எனவே லேண்டர் தரை இறங்கும் நிகழ்வை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்தது.
ஆனால் லேண்டரை தரை இறக்கும்போது நிலவில் இருந்து சில கிலோ மீற்றர் தொலைவில் அதன் வேகம் அதிகரித்தது.
இதன் காரணமாக லேண்டர் கருவி திசைமாறி சென்று நிலவின் மேற்பரப்பில் மோதி விழுந்து விட்டது.
லேண்டருடன் மீண்டும் தகவல் தொடர்பை ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றிபெறவில்லை. இதனால் 14 நாட்களுக்கு பிறகு லேண்டரை உயிர்ப்பிக்கும் முயற்சியை இஸ்ரோ கைவிட்டது.
லேண்டர் திசைமாறி சென்று விழுந்து விட்டதாக கருதப்படும் பகுதியில் உயர்சக்தி கொண்ட கேமராக்கள் மூலம் படம் பிடிக்கப்பட்டது.
இந்நிலையில் லேண்டர் எந்த பகுதியில் விழுந்துள்ளது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை என இஸ்ரோ அறிவித்தது.
இதற்கிடையே அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு விஞ்ஞானிகள் லேண்டரை கண்டுபிடிக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டனர்.
இந்நிலையில் நிலவுக்கு அமெரிக்காவின் நாசா அனுப்பிய செயற்கைக்கோள் விக்ரம் லேண்டரை கண்டுபிடித்துள்ளது.
மேலும் நிலவின் தென்துருவத்தில் விக்ரம் லேண்டரின் பாகங்கள் விழுந்த இடத்தை புகைப்படங்களுடன் வெளியிட்டுள்ளது நாசா.
புகைப்படத்தில் உள்ள பச்சை நிறப் புள்ளிகள் லேண்டரின் சிதைவுகளை குறிப்பதாகவும், நீல நிற புள்ளிகள் விக்ரம் லேண்டரின் பாகங்கள் விழுந்ததால் ஏற்பட்ட பள்ளத்தை குறிப்பதாகவும் நாசா தெரிவித்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் 17, ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி மற்றும் 15 ஆம் திகதி நவம்பர் 11 ஆகிய நாட்களில் வெளியிட்ட புகைப்படங்களை ஆய்வு செய்த தமிழக இளைஞர் சண்முக சுப்பிரமணியன், விக்ரம் லேண்டரின் பாகங்கள் விழுந்த இடத்தை கண்டுபிடித்து நாசாவுக்கு அனுப்பி உள்ளார்.
அவரது ஆய்வை நாசா விஞ்ஞானிகளும் உறுதி செய்து அவருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
சண்முக சுப்பிரமணியன் கொடுத்த தகவலின் அடிப்படையில், நாசா வெளியிட்டுள்ள புகைப்படத்தில் விக்ரம் லேண்டரின் பாகங்கள் விழுந்த இடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
அந்த புகைப்படத்தில் உள்ள பச்சை நிறப் புள்ளிகள் லேண்டரின் சிதைவுகளை குறிப்பதாகவும், நீல நிற புள்ளிகள் லேண்டரின் பாகங்கள் விழுந்ததால் ஏற்பட்ட பள்ளத்தை குறிப்பதாகவும் நாசா கூறி உள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM