சுவிஸ் தூதுரங்கத்தின் முன்னால் ஓய்வுப்பெற்ற இராணுவ அதிகாரி சட்டதரணி அஜித் பிரசன் முன்னெடுத்த உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்றிரவு கைவிட்டுள்ளார்.
சுவிஸ் தூதுரங்கத்தின் உத்தியோகஸ்தரை கடத்தப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவமானது நாட்டிற்கும் புதிய அரசாங்கத்திற்கு அவப்பெயரை எற்படுத்தும் செயல் என தெரிவித்து ஓய்வுப்பெற்ற இராணுவ அதிகாரி சட்டதரணி அஜித் பிரசன்ன சுவிஸ் தூதுரங்கத்தின் முன்னால் நேற்று திங்கட்கிழமை சுவிஸ் தூதரகத்திற்கு முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்தார்.
இந்த போராட்டத்தில் ஈடுப்பட்ட அவர்,சுவிஸ் தூதுரங்க உத்தியோகஸ்தரை கடத்தியதாக கூறப்படும் சம்பவத்தினால் நாட்டிற்கு பெரும் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. இவரின் இந்த பிரசாரத்தின் காரணமாக சர்வதேசத்தின் மத்தியில் எமது நாட்டின் நற்பெயர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பான உண்மை தகவல்களை அவர் பொலிஸாருக்கு தெரியப்படுத்த வேண்டும்.
இதுதொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் பல தகவல்களை பெற்றுக் கொண்டுள்ளனர். தொடர்ந்தும் இவர் அமைதியை காக்காது உண்மையை தெரியப்படுத்த வேண்டும். நாட்டிற்கும் புதிய அரசாங்கத்திற்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் வகையிலே இந்த செயற்பாடு அமையப்பெற்றுள்ளதென கோரிக்கை தெரிவித்தார்.
இந்நிலையில், வணக்கத்துக்குரிய அதுரலியே ரத்ன தேரர் மற்றும் ஓய்வு பெற்ற ரியர் அத்மிரல் சரத் வீரசேகரவின் கோரிக்கைக்கு அமைய அவர் தனது போராட்டத்தை கைவிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM