(எம்.மனோசித்ரா)
கொழும்பு காலி முகதிடலில் நடைபெறும் மோசடிகள் மற்றும் அங்குள்ள குறைப்பாடுகள் தொடர்பில் ஆராயும் பொருட்டு 24 மணித்தியாலங்களும் செயற்படும் வகையிலான கண்காணிப்பு குழுவொன்றினை நியமிக்குமாறு துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் வீதி, பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ துறைமுக அதிகார சபையின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருக்கிறார்.
காலிமுக திடலுக்கு கண்காணிப்பு விஜயமொன்றினை மேற்கொண்டதன் பின்னரே அமைச்சர் இவ்வாறு பணிப்புரை விடுத்துள்ளார்.
காலிமுகதிடலின் முகாமைத்துவ மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளை உரிய முறையில் முன்னெடுப்பதற்கு அவசியமான பல தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் கொள்கை திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 'அனைவருக்கும் தூய்மையான நாட்டை கையளித்தல் ' எனும் எண்ணக்கருவுக்கு அமைய பொழுது போக்கிற்காக மற்றும் ஓய்வுபொழுதை கழிப்பதற்காக பொதுமக்கள் வருகைத்தரும் கடற்கரைச் சார் காலிமுகத்திடலை சுத்தமான இடமாக மாற்றியமைக்கும் நோக்கத்துடனே மேற்கூறப்பட்ட தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
காலிமுகதிடலில் உள்ள குறைப்பாடுகளை வெகுவிரைவில் நிவர்த்திச் செய்யுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதுடன், உல்லாச பயணிகள் மற்றும் பார்வையாளர்களுக்கு இடையூறுகள் ஏற்படாதவாறு வீதிகளை புனரமைத்தல் , சிறு கடைகளில் மக்களின் சுதந்திரத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வியாபார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான முறையொன்றினை திட்டமிடுதல் மற்றும் கடற்கரையினை முழுமையாக சுத்தம் செய்தல் ஆகிய செயற்பாடுகளை விரைவாக முன்னெடுக்குமாறு அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM