ஆபிரிக்காவிலுள்ள பர்கினோ பாசோ நாட்டில் அமைந்துள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் பயங்கரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
ஆப்பிரிக்காவிலுள்ள பர்கினோ பாசோ நாட்டில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் ஐ.எஸ் , அல்-கொய்தா போன்ற பயங்கராவாத அமைப்புகளின் அச்சுறுத்தல் அதிகரித்திருந்த நிலையில், அந்நாட்டு இராணுவமும் பொலிஸாரும் கடும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், நேற்றையதினம் அந்நாட்டின் கிழக்குப்பகுதியின் ஹண்டொகுவோரா நகரிலுள்ள கிறிஸ்தவ ஆலயத்திற்குள் புகுந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தபோது உள்ளே நுழைந்த பயங்கரவாதிகள் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டனர்.
அதன் பின்னர் ஆலயத்தில் இருந்து சிறிது தொலைவில் இருந்த பாதுகாப்பு படைகளையும் பயங்கரவாதிகள் தாக்குதல் மேற்கொண்டனர். இதில் 3 அதிகாரிகள் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லையென என அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, கடந்த அக்டோபர் மாதம் பர்கினோ பாசோவிலுள்ள மசூதியில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM