முஸ்லிம்  ஒரு­வரை  அமைச்­ச­ராக நிய­மிக்­கா­தது  ஏன் ?

02 Dec, 2019 | 03:42 PM
image

இலங்கை முஸ்­லிம்­களை பேசுபொரு­ளாக்கிக் கொண்டே பௌத்த பேரி­ன­வா­திகள் அர­சியல் நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கின்­றார்கள். முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக கருத்­துக்­களை முன்வைத்து வாக்­கு­களை பெற்றுக் கொள்ளக் கூடி­ய­தொரு சூழல் பௌத்த கடும்­போக்கு அமைப்­புக்­க­ளினால் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது.

முஸ்­லிம்­களும், தமி­ழர்­களும் ஆட்­சி­யா­ளர்­களை தீர்­மா­னிக்கும் சக்­தி­க­ளாக இருப்­ப­தனை அனு­ம­திக்க முடி­யாது. அவர்கள் ஆட்சி அமைப்­ப­தற்கு ஆத­ரவு வழங்­கி­ விட்டு, அர­சாங்­கத்தை அடி­ப­ணிய வைத்து, பேரம் பேசி செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். இதனால், நாட்­டிற்கு பாரிய ஆபத்து என்­பன போன்ற கருத்­துக்­களை பௌத்த கடும்­போக்­கு­வாத அமைப்­புக்­களும், அர­சி­யல்­வா­தி­களும் கொண்­டுள்­ளார்கள்.

நாட்டில் எல்லா இனங்­க­ளிலும் போதைவஸ்து கடத்தல் காரர்கள், பாதாள கோஷ்­டி­யினர் போன்ற பாரிய குற்றச் செயல்­களில் ஈடு­ப­டு­கின்­ற­வர்கள் இருக்­கின்­றார்கள். இவர்கள் மதம், மொழி, இனம் என்­ப­தனைக் கடந்­த­வர்கள். இத்­த­கைய குற்றச் செயல்­களில் ஈடு­ப­டு­கின்­ற­வர்கள் மேற்­படி வேறு­பா­டு­களைக் கடந்த ஒரு குழு­வினர் என்றே அடை­யா­ளப்­ப­டுத்த வேண்டும். ஆயினும், முஸ்­லிம்­களை மாத்­திரம் இலக்கு வைத்து மேற்­படி குற்­றச்­சாட்­டுக்­களில் ஈடு­ப­டு­கின்­றார்கள் என்று பிர­சா­ரங்­களை பௌத்த கடும்­போக்­கு­வா­திகள் மேற்­கொள்­கி­றார்கள்.

ஆனால், மேற்­படி பாரிய குற்றச்செயல்­களைச் செய்­கின்­ற­வர்­களின் தலை­வர்­க­ளாக சிங்­கள சமூ­கத்தைச் சேர்ந்­த­வர்­களே செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். முஸ்­லிம்­க­ளினால் நாட்டின் பொரு­ளா­தாரம் பாழாக்­கப்­ப­டு­கின்­றது என்று தெரி­வித்து, முஸ்­லிம்­களின் பொரு­ளா­தா­ரத்தை சிதைக்கும் நட­வ­டிக்­கை­க­ளையும் பௌத்த கடும்­போக்­கா­ளர்கள் மேற்­கொண்­டார்கள். முஸ்­லிம்­களின் வர்த்­தக நிலை­யங்கள் பல­வற்றை எரித்­தார்கள், முஸ்லிம் கடை­களில் வியா­பார நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ளக் கூடா­தென்றும்   கட்­ட­ளை­யிட்­டார்கள்.

இவ்­வாறு முஸ்­லிம்­களின் அர­சியல், கலா­சாரம், பொரு­ளா­தாரம் ஆகி­ய­வற்­றிக்கு எதி­ராக பௌத்த கடும்­போக்­கா­ளர்கள் எதிர் நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்ட போதிலும், பெரும்­பான்மை மக்­க­ளி­டையே அதற்கு எதி­ராக விரல்­விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரே பேசி­னார்கள். அதனால், முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக பௌத்த கடும்­போக்­கா­ளர்கள் மேற்­கொண்ட நட­வ­டிக்­கை­க­ளுக்கு பேரி­ன­வாத மக்­க­ளி­டையே ஒரு அங்­கீ­காரம் இருந்­தது என்றே சொல்ல வேண்டும். இதற்கு இரண்டு பிர­தான கார­ணி­களை அடை­யாளம் காணலாம். முத­லா­வது முஸ்­லிம்கள் ஆபத்­தா­ன­வர்கள், அவர்கள் நாட்­டிற்கும், பௌத்­தத்­திற்கும் எதி­ரா­ன­வர்கள் என்ற பிர­சாரம் வெற்­றி­ய­ளித்­துள்­ளமை. இரண்­டா­வது பௌத்த கடும்­போக்கு அமைப்­புக்­களின் பின்னால் இருந்த அர­சியல் பலம்.

பௌத்த கடும்­போக்கு அமைப்­புக்கள் இவ்­வாறு செயற்­பட்­ட­மைக்கு ஒரு அர­சியல் தேவை இருந்­தது. அந்த தேவை நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது என்ற கருத்தை ஜனா­தி­பதித் தேர்­தலின் பின்னர் பௌத்த கடும்­போக்கு அமைப்­புக்கள் வெளி­யிட்­டுள்ள கருத்­துக்­களின் மூல­மாக அறிந்து கொள்ளக் கூடி­ய­தாக இருக்­கின்­றது.

ஜனா­தி­பதித் தேர்­தலில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக வெளிப்­ப­டை­யாக கருத்­துக்­களை முன் வைக்கும் பௌத்த கடும்­போக்கு அமைப்­புக்கள் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கே ஆத­ரவு வழங்­கி­யது. ஜனா­தி­பதித் தேர்­தலில் கோத்­தா­பய ராஜபக் ஷ வெற்றி பெற்­றதும், பொதுபல சேனாவை பாரா­ளு­மன்றத் தேர்­தலின் பின்னர் கலைக்க இருப்­ப­தாக அந்த அமைப்பு தெரி­வித்­தது. இதனைத் தொடர்ந்து நவ சிங்­கள ராவய அமைப்பின் செய­லாளர் மாகல்­கந்தே சுதந்த தேரர், அர­சர்­க­ளுக்கு பிறகு நாட்­டிற்கு சிறந்த தலைவர் ஒருவர் கிடைத்­துள்­ள­மையால், இனிமேல் தேசத்தை பாது­காக்க தேசிய அமைப்­புக்கள் தேவை­யில்லை எனத் ஊட­கங்­க­ளுக்கு தெரி­வித்திருந்தார்.

இந்த அமைப்­புக்­களின் மேற்­படி கருத்­துக்­களின் மூல­மாக அவர்­களின் முஸ்லிம் விரோத செயற்­பா­டு­களின் பின்னால் ஒரு அர­சியல் தேவை இருந்­த­மையை உணர்ந்து கொள்ளக் கூடி­ய­தாக இருக்­கின்­றது.

இதேவேளை, முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக பௌத்த கடும்­போக்கு அமைப்­புக்கள் முன் வைத்த எந்தக் கருத்­துக்­க­ளிலும் உண்மை இருக்­க­வில்லை. முஸ்லிம் அர­சியல் தலை­வர்­களும், கட்­சி­களும் அர­சாங்­கத்தை அமைப்­ப­தற்கு பேரம் பேசி, அர­சாங்­கத்தை அடி­மைப்­ப­டுத்தி தங்கள் சமூ­கத்தின் தேவை­களை பூர்த்தி செய்து கொள்­வ­தாக தெரி­வித்­துள்­ளார்கள். காலத்­திற்கு காலம் மாறும் ஆட்­சியில் முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் அமைச்­சர்கள் பத­வி­களைப் பெற்­றுள்­ளார்கள். ஆனால், சமூகம் சார்ந்த எந்த பேரத்தை பேசி தீர்வு கண்­டுள்­ளார்கள் என்று பார்க்க வேண்டும். அம்­பாறை, திரு­கோ­ண­மலை,  மட்­டக்­க­ளப்பு மாவட்­டங்­க­ளிலும், பிற இடங்­க­ளிலும் உள்ள முஸ்­லிம்­களின் காணிப் பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­ப­ட­வில்லை.

 முஸ்­லிம்­களின் அர­சியல் அபி­லா­ஷைகள் ஏற்றுக் கொள்­ளப்­ப­ட­வில்லை. கரை­யோர மாவட்டக் கோரிக்கை ஏற்றுக் கொள்­ளப்­ப­ட­வில்லை. இக்­கோ­ரிக்கை பற்றி முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் பேசு­வ­தில்லை. வட­மா­காண முஸ்­லிம்­களின் மீள்­கு­டி­யேற்றம் முழு­மை­யாக நிறை­வ­டை­ய­வில்லை. அரச உயர் பத­வி­களில் முஸ்­லிம்­க­ளுக்­கு­ரிய பங்­கீ­டுகள் வழங்­கப்­ப­ட­வில்லை. இவை­களை கேட்டு பெற்றுக் கொள்ளும் நிலை­யிலும் முஸ்லிம் அர­சியல் தலை­வர்­க­ளில்லை. இவ்­வாறு சமூகம் சார்ந்த எந்தப் பிரச்­சி­னை­க­ளையும் முஸ்லிம் சமூ­கத்­திற்கு தீர்க்­கா­த­வர்­க­ளா­கவே தலை­வர்கள் உள்­ளார்கள். முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரா­க­வுள்ள தேர்தல் திருத்தச் சட்டம், 18ஆவது திருத்தச் சட்டம் போன்­ற­வற்­றிக்கு ஆத­ரவு அளித்து பேரி­ன­வாத சமூ­கத்தின் நலன்­களை மேலும் விரி­வு­ப­டுத்தும் சட்ட ஏற்­பா­டு­க­ளுக்கே முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் துணை­யாக செயற்­பட்­டுள்­ளார்கள்.

இப்­ப­டி­யாக முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் செயற்­பட்டுக் கொண்­டி­ருக்கும் போது, முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் பேரம் பேசி அர­சாங்­கத்தை அடிய பணிய வைத்து சமூ­கத்தின் தேவை­களை பூர்த்தி செய்து கொண்­டி­ருக்­கின்­றார்கள் என்ற பௌத்த கடும்­போக்­கா­ளர்­களின் குற்றச்­சாட்டு உண்­மை­யற்­றது. அந்தக் குற்­றச்­சாட்டு அர­சியல் தேவைக்­காக முஸ்­லிம்­களை பலிக்­க­டா­வாக்க எடுத்த பெரும் முயற்சி என்றே கூறலாம்.  இது போலவே, பௌத்த கடும்­போக்­கா­ளர்கள் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக முன்வைத்­துள்ள அனைத்துக் குற்­றச்­சாட்­டுக்­களும் உள்­ளன.

முஸ்­லிம்­க­ளினால் பௌத்த மதம் மற்றும் கலா­சா­ரத்­திற்கு ஆபத்து என்­பது கூட ஒரு அபத்­த­மான குற்­றச்­சாட்­டாகும். இந்­தி­யாவில் இந்து மதத்­திற்கு ஆபத்து என்று பி.ஜே.பி ஆத­ரவு இந்­து­வாத அமைப்­புக்கள் அர­சியல் தேவைக்­காக முன் வைத்த, அதே பாணி­யி­லேயே இலங்­கையில் பௌத்­தத்­திற்கு ஆபத்து என்ற குற்­றச்­சாட்டும், அதன் பின்­ன­ணியும் உள்­ளது.

2009ஆம் ஆண்­டிற்கு முன்னர் நாட்டின் பாது­காப்­புக்கும், ஐக்­கி­யத்­திற்கும் தமி­ழர்­க­ளி­னாலும், அவர்­களின் ஆயுதக் குழுக்­க­ளி­னாலும் ஆபத்து. நாட்டை பாது­காத்துக் கொள்ள சிறந்த தலைவர் வேண்­டு­மென்றும், இனங்­க­ளுக்கு இடையே ஐக்­கி­யத்­தையும், சமா­தா­னத்­தையும் ஏற்­ப­டுத்த வேண்­டு­மென்றும் பேரி­ன­வா­திகள் தமது அர­சியல் நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டார்கள். இந்த மூல மந்­தி­ரத்தை சிங்­கள மக்­க­ளி­டையே ஆர்.பிரே­ம­தாஸ, சந்­தி­ரிகா குமா­ர­துங்க, 2005ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக் ஷவும் உச்­ச­ரித்தே நாட்டின் ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்­யப்­பட்­டார்கள்.

2009ஆம் ஆண்டு விடு­தலைப் புலிகள் தோல்­வி­ய­டைந்­ததன் பின்னர், பேரி­ன­வாத அர­சியல் தலை­மைகள் மற்றும் கட்­சிகள் தமது தேர்தல் வியூ­கத்தில் ஒரு பெரும் மாற்­றத்தை ஏற்­ப­டுத்திக் கொண்­டன. இதனை 2010ஆம் ஆண்டு ஜனா­தி­பதித் தேர்­தலில் அவ­தா­னிக்கக் கூடி­ய­தாக இருக்­கின்­றது. யுத்த வெற்­றியின் மம­தையில் பௌத்த கடும்­போக்­கா­ளர்­களும், பேரி­ன­வாத அர­சி­யல்­வா­திகள் பலரும் பௌத்த சிங்­கள மக்­களின் தனிப் பெரும் வாக்­கு­க­ளினால் ஆட்சி அமைப்­ப­தற்­கு­ரிய செயற்­திட்­டங்­களை முன்­னெ­டுத்துக் கொண்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.

2010ஆம் ஆண்டு நடை­பெற்ற ஜனா­தி­பதித் தேர்­தலில் யுத்த வெற்­றியே தேர்தல் பிர­சா­ரத்­திற்­காக மூலக்­க­ரு­வாகக் கொள்­ளப்­பட்­டது. இந்த தேர்­தலில் முஸ்­லிம்­களும் பெருமளவில் மஹிந்த ராஜபக் ஷவுக்கு வாக்­க­ளித்­தார்கள். அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ், தேசிய காங்­கிரஸ் ஆகிய கட்­சிகள் மஹிந்த ராஜபக் ஷவுக்கு ஆத­ரவு வழங்­கி­யமை குறிப்­பி­டத்­தக்­கது.

இந்தப் பின்­ன­ணி­யில் தான் 2015ஆம் ஆண்டு ஜனா­தி­பதித் தேர்தல் நடை­பெற்­றது. இந்தத் தேர்­தலில் மஹிந்த ராஜபக் ஷ முஸ்லிம் கட்­சி­களின் ஆத­ரவை வேண்டி நின்றார். முஸ்லிம் கட்­சி­களும் அதற்கு பச்­சைக்­கொடி காட்டி கொடுக்கல் வாங்­கல்­க­ளையும் மேற்­கொண்­டன. ஆனால், முஸ்லிம் காங்­கி­ரஸின் முன்னாள் செய­லாளர் எம்.ரி.ஹஸன்­அலி போன்ற ஒரு சிலரும், முஸ்லிம் சமூ­கத்தில் பெரும்­பான்­மை­யி­னரும் மஹிந்த ராஜபக் ஷவுக்கு எதி­ரான முடி­வு­களை எடுத்துக் கொண்­டனர்.

இதனால், முஸ்லிம் காங்­கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் ஆகிய கட்­சிகள் மக்­களின் முடி­வுக்கு கட்­டுப்­பட்டு, மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு ஆத­ரவு வழங்கி அவரை வெற்­றி­யடைச் செய்­தார்கள். ஆட்சி மாற்றம் முஸ்­லிம்­க­ளுக்கு விடி­வினைத் தரும் என்று நம்­பிய போதிலும், மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் ஆட்சி, முஸ்­லிம்­களை பொறுத்­த­வரை மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்­சியை விடவும் இருண்­ட­தொன்­றா­கவே இருந்­தது என்­பது உண்­மை­யாகும். இந்த ஆட்­சியில் இன­வா­தி­க­ளினால் முஸ்­லிம்கள் பல இடங்­களில் தாக்­கப்­பட்­டார்கள்.

இத­னி­டையே 2019 ஏப்ரல் 21இல் முஸ்­லிம்­களில் ஒரு குழு­வினர் தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­களை மேற்­கொண்­டார்கள்.  

           இதில் சுமார் 250இற்கும் மேற்­பட்­ட­வர்கள் கொல்­லப்­பட்­டார்கள். இந்தத் தாக்­குதல் முஸ்­லிம்­களின் அர­சியல், பொரு­ளா­தாரம், பாது­காப்பு, மத­வி­ழு­மி­யங்கள், கலா­சாரம் ஆகி­ய­வற்றில் மோச­மான தாக்­கங்­களை ஏற்­ப­டுத்­தி­யது. பௌத்த கடும்­போக்­கா­ளர்­களின் முஸ்லிம் விரோத நட­வ­டிக்­கை­களை மேலும் பலப்­ப­டுத்தும் ஒன்­றா­கவே இத்­தாக்­குதல் அமைந்­தது. முஸ்லிம் அர­சியல் தலை­வர்­களின் மீது குற்­றச்­சாட்­டுக்கள் முன் வைக்­கப்­பட்­டன. பல இடங்­களில் முஸ்லிம் தாக்­கப்­பட்­டார்கள்.

இந்த நிலை­மைகள் நடந்­தேறிக் கொண்­ரு­ரந்த சூழ­லில்தான் 2019இற்­கு­ரிய ஜனா­தி­பதித் தேர்தல் நடை­பெற்­றது. இந்த தேர்­தலில் முஸ்­லிம்கள் யாரை ஆத­ரிப்­பது என்­பதில் முஸ்லிம் கட்­சி­க­ளுக்கும், முஸ்­லிம்­க­ளுக்கும் இடையே கேள்­விகள் இருந்­தன. இந்தத் தேர்­தலில் மஹிந்த ராஜபக் ஷவின் சகோ­த­ரரும், முன்னாள் பாது­காப்பு செய­லா­ள­ரு­மான கோத்­தா­ப­யவும், முன்னாள் ஜனா­தி­பதி ஆர்.பிரே­ம­தா­ஸவின் மகன் சஜித்தும் வெற்­றிக்­கான வாய்ப்பைக் கொண்ட வேட்­பா­ளர்­க­ளாக போட்­டி­யிட்­டார்கள்.

இந்த தேர்­தலில் முஸ்­லிம்கள் பௌத்த கடும்­போக்­கா­ளர்­களின் செயற்­பா­டுகள் தொடர்பில் தங்­க­ளி­டையே காணப்­படும் அச்­சத்தை வைத்தே முடி­வு­களை எடுக்க வேண்­டிய நிலைக்கு தள்­ளப்­பட்­டார்கள். இதனால், கோத்­தா­பய வெற்றி பெற்றால் பௌத்த கடும்­போக்கு அமைப்­புக்­க­ளி­னதும், அர­சி­யல்­வா­தி­க­ளி­னதும் கைகள் மேலும் பல­ம­டைந்து, தங்­களின் மீது மேலும் எதிர் நட­வ­டிக்­கைளை மேற்­கொள்­வார்கள் என்ற முடி­வுக்கு வந்­தார்கள். இதனை தவறு என்றும் கணிக்க முடி­யாது. கடந்த கால நட­வ­டிக்­கைகள், பௌத்த கடும்­போக்கு அமைப்­புக்கள் கோத்­தா­ப­ய­வுக்கு ஆத­ரவு வழங்­கு­வது, பௌத்த கடும்­போக்­கா­ளர்கள் ஏப்ரல் 21 தாக்­கு­தலின் பின்னர் மேற்­கொண்ட நட­வ­டிக்­கைகள் முஸ்­லிம்­க­ளி­டையே காணப்­பட்ட அச்­சத்­தையும், பீதி­யையும் மேலும் அதி­க­ரிக்கச் செய்­தது. இதனால், முஸ்­லிம்­களின் பெரும்­பான்­மை­யினர் சஜித் பிரே­ம­தாஸ ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்­யப்­பட்டால் தங்­க­ளுக்கு பாது­காப்பு ஏற்­படும் என்று நம்­பி­னார்கள். இதே வேளை, முஸ்லிம் காங்­கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் ஆகிய கட்­சிகள் சஜித்­திற்கு ஆத­ருவு வழங்­கவும் தீர்­மா­னித்துக் கொண்­டன.

      2015ஆம் ஆண்டு சிறு­பான்­மை­யி­னரின் அதி­க­பட்ச வாக்­கு­க­ளி­னால்தான் மஹிந்த ராஜபக் ஷ தோல்வி அடைந்தார் என்ற அனு­பவம் பொது­ஜன பெர­மு­ன­வுக்கு இருந்­தது. இதனால், சிங்­கள மக்­களின் அதிக பட்ச வாக்­கு­க­ளையும், சிறு­பான்­மை­யி­னரின் மிகக் குறைந்த பட்ச வாக்­கு­க­ளையும் பெற்றுக் கொள்ளும் போதுதான் வெற்றி வாய்ப்பை அடை­ய­லா­மென்று முடிவு செய்­யப்பட்;டது. இதற்கு அமை­வாக கோத்­தா­ப­யவின் தேர்தல் வியூகம் அமைந்­தி­ருந்­தது. விகா­ரை­களை மையப்­ப­டுத்தி பிரச்­சா­ரங்கள் மேற்­கொள்­ளப்­பட்­டன. நாட்­டி­னதும், பௌத்த மதத்­தி­னதும் பாது­காப்பு குறித்துப் பேசியே கோத்­தா­பய ராஜபக் ஷ வெற்றி பெற்றார்.

இந்தப் பின்­ன­ணி­க­ளுக்கு மத்­தியில் கோத்­தபாய ஜனா­தி­ப­தி­யாக வெற்றி பெற்­றுள்ளார். புதிய பிர­தமர், அமைச்­சர்கள் மற்றும் இரா­ஜாங்க அமைச்­சர்கள் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார்கள். ஆனால், முஸ்லிம் ஒருவர் கூட அமைச்சர் பத­வி­களில் நிய­மிக்­கப்­ப­ட­வில்லை. இதனால், புதிய ஜனா­தி­பதி குறித்து விமர்­ச­னங்கள் முன் வைக்­கப்­ப­டு­கின்­றன. கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கு தமி­ழர்­களில் சுமார் 90 வீத­மா­ன­வர்கள் வாக்­க­ளிக்­க­வில்லை. இதற்கும் தமி­ழர்கள் மத்­தியில் உள்ள அச்­சமே கார­ண­மாகும். ஆயினும், டக்ளஸ் தேவா­னந்தா, ஆறு­முகம் தொண்­டமான் ஆகி­யோர்கள் அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள அமைச்­சர்­க­ளாக நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார்கள். முஸ்­லிம்­களில் பைஸர் முஸ்­தபா, மஸ்தான் ஆகி­யோர்கள் கோத்­தா­பய ராஜபக் ஷவின் வெற்­றிக்கு ஆத­ரவு வழங்­கிய போதிலும், அவர்­களில் ஒரு­வ­ருக்­கேனும் அமைச்சர் பதவி வழங்­க­வில்லை. சிறு­பான்­மை­யி­னரின் ஆத­ரவு பெரு­ம­ள­வுக்கு கிடைக்­கா­மைக்கு அவர்­க­ளி­டையே காணப்­படும் அச்­சம்தான் காரணம் என்­பது தெளி­வான ஒன்­றாகும். இந்த அச்­சத்தை இல்­லாமல் செய்­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை எடுப்­பது ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவின் பொறுப்­பாகும். அதனைச் செய்­வ­தற்கு முதற்­ப­டி­யாக முஸ்­லிம்­களில் ஒரு­வரை அமைச்­ச­ராக நிய­மித்து இருக்­கலாம். இதனால், முஸ்­லிம்­கி­டையே காணப்­பட்ட அச்சம் நியா­ய­மா­ன­துதான் என்று எண்ண வேண்­டி­யுள்­ளது.

அதே வேளை, முஸ்­லிம்­க­ளி­டையே காணப்­படும் அச்­சத்தை அமைச்சர் பத­வி­களின் மூல­மா­கத்தான் இல்­லாமல் செய்ய வேண்­டு­மென்­ப­தல்ல. முஸ்­லிம்­க­ளி­டையே பௌத்த கடும்­போக்­கு­வாத அமைப்­புக்­களின் ஜன­நா­யக விரோத செயற்­பா­டு­களே கார­ண­மாகும். இந்த அச்­சத்தை நீதி­யையும், நியா­யத்­தையும் நிலை­நாட்டும் போது கூட இல்­லாமல் செய்­யலாம். ஆயினும், ஆட்­சியில் முஸ்­லிம்­க­ளுக்கும் வாய்ப்புக் கொடுத்­துள்ளோம் என்று சர்­வ­தே­சத்­திற்கும், நாட்டு மக்­க­ளுக்கும் காட்­டு­வ­தற்கு முஸ்லிம் ஒரு­வரை அமைச்­ச­ராக நிய­மித்­தி­ருக்க வேண்டும்.

முஸ்லிம் ஒரு­வரை எந்­த­வொரு அமைச்சர் பதவிக்கும் நியமிக்காது இருப்பதனை ஜனாதிபதித் தேர்தலில் கோத்தாபயவுக்கு ஆதரவு அளித்த முஸ்லிம் பிரமுகர்கள் நியாயப்படுத்திக் கொண்டிருப்பதனையும் காண்கின்றோம். அதாவது, கோத்தாபயவுக்கு முஸ்லிம்களில் எத்தனை சதவீதத்தினர் வாக்களித்தார்கள் என்று கேட்கின்றார்கள். இந்தக் கேள்வி கோத்தாபயவுக்கு ஆதரவு அளித்த முஸ்லிம் பிரமுகர்களுக்குக் கூட எதிர்காலத்தில் ஆபத்தாக அமையலாம். பொதுத் தேர்தலில் அமோக வெற்றிபெற வேண்டுமாயின் தங்களினால் கட்டமைக்கப்பட்டுள்ள சிங்கள பெரும்பான்மையினரால் உருவாக்கப்பட்ட ஜனாதிபதி என்ற வெற்றிக் கோசத்தை பாதுகாத்துக் கொள்வதற்காகவே அமைச்சர் பதவிகளில் முஸ்லிம் ஒருவரையேனும் அமைச்சராக நியமிக்காது இருப்பதற்கு காரணமாகும் என்பதனை புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

 அதனால், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ தமது அமைச்சரவையில் முஸ்லிம் ஒருவரையேனும் அமைச்சராக நியமிக்காது இருப்பது பொதுத் தேர்தலை மையப்படுத்தியது என்பது மறுக்க முடியாத ஒன்றாகும். இந்த முடிவு பாராளுமன்ற தேர்தலின் பின்னரும் தொடருமாக இருந்தால், அதுவே முஸ்லிம்களுக்கு மிகப் பெரிய ஆபத்தாக அமையும். அதே வேளை, முஸ்லிம் ஒருவருக்கு அமைச்சர் பதவியை கொடுக்கும் போது அதனை பௌத்த கடும்போக்காளர்கள் எதிர்க்கவும் கூடும். வடமேல் மாகாண சபையின் ஆளுநராக முஸம்மில் நியமிக்கப்பட்டுள்ளார். அவரை ஆளுநர் பதவியிலிருந்து நீக்குமாறு வடமேல் மாகாணத்தில் பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த சுவரொட்டிகளுக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ அடிபணியமாட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- சஹாப்தீன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13