சிகரட்டுக்கான வரி விரைவில் அதிகரிக்கப்படும்

Published By: Raam

01 Jun, 2016 | 07:55 AM
image

சிக­ரட்­டுக்­கான வரியை அதி­க­ரிப்­பது தொடர்­பான யோசனை அமைச்­ச­ர­வைக்கு முன்­வைக்­கப்­படும்  . எதிர்வரும் 2020 ஆம் ஆண்டில் இலங்­கையில் புகை­யிலை பயிர்­­செய்­கைக்கு தடை  ஏற்படுத்தப்படும் என்று  ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறிசேன தெரி­வித்தார்.

உலக புகையிலை எதிர்ப்பு தினம் தொடர்­பான நிகழ்வு நேற்று செவ்­வாய்க்கி­ழமை கொழும்பு பண்­டா­ர­நா­யக சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்தின் பி. குழு அறையில் இடம்­பெ­ற்­றது. இதில் பிர­த­ம அதி­தி­யாக கலந்து கொண்டு உரை­யாற்­றுகையிலேயே  அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார். 

ஜனா­தி­பதி இங்கு தொடர்ந்தும் உரை­யாற்­று­­கையில், 

சிகரட் புகைப்­பதால் இலங்­கையில் ஒரு­வ­ரு­டத்­திற்கு 25000 பேர் உயி­ரி­ழக்­கின்­றனர். இதில் பெரும்­பா­லானோர் சிகரட் புகை­யை சுவா­சிக்கும் பிள்­ளை­களே  இடம்பெறுகின்றனர்.  

இன்று நாட்டில் வறு­மையில் வாடும் குடும்­பங்­கள் சிகரட் பழக்­கத்­தினாலும், மதுபாவ­னை­யாலுமே அந்த நிலைக்கு தள்­ளப்­பட்­டுள்­ளனர். அவர்­க­ள­து குடு­ம்ப வரு­மா­னத்தில் நூற்­றுக்கு 35 சத­வீதத்தை  சிக­ரட்­டுக்கும், மது­வுக்குமே செலவு செய்­கின்­றனர். இதனால் அவர்கள் வறு­மை­யி­லி­ருந்து மீள முடி­யா­துள்­ளது. ஒரு­புறம் வறுமை மறு­புறம் நோய் இவர்­க­ளை வாட்­டி வதைக்­கின்­றது. 

எனவே இத­னை தடுக்க பல்­வேறு தெ ளிவு­ப­டுத்­தல்கள், வேலைத்­திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டாலும், புகை­யிலை மது உற்­பத்தி நிறு­வ­னங்கள் அதற்கு எதி­ராக சூட்­சு­ம­மாக தமது வியா­பார பிர­சா­ரங்­களை ஏமாற்றும் விதத்தில் முன்­னெ­டுக்­கின்­றன. இலங்கை புகை­யிலை கூட்­டுத்­தா­பனம் என பிறப்பு சான்­­றி­தழை இந் நிறு­வனம் பெற்­­றி­ருந்­தா­லும், அதன் உரி­மை­யா­ளர்கள், பங்­கா­ளர்­கள் அனை­வரும் வெளிநாட்டவர்கள். 

  சிகரெட்டுக்கான வரிகள் அதிகரிக்கப்படுவதில்லை. இது தொடர்பாக இன்று (நேற்று) செவ்வாய்க்கிழமை இடம்பெறும் அமைச்சரவை கூட்டத்தில் நாம்   யோசனையை முன்வைப்போம். உடனடியாக சிகரெட்டுக்கான விலையை அதிகரிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும். 

எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு அஸ்பெஸ்டாஸ் பாவனை நாட்டில் தடைசெய்யப்படவுள்ளது. அதேபோன்று 2020 ஆம் ஆண்டில் இலங்கையில் புகையிலை பயிர்செய்கைக்கு தடை விதிக்கப்படும். 

எனவே புகையிலை பயிர்செய்கையாளர்களுக்கு மாற்று பயிர்செய்கை தொடர்பில் தெ ளிவுபடுத்துமாறு விவசாய அமைச்சருக்கு தெரிவித்துள்ளேன்.  அரசாங்கம் நாட்டு மக்களுக்கான தனது பொறுப்பை நிறைவேற்றும் என்றார்.  

சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன இந்த நிகழ்வில் உரையாற்றுகையில் 

கடந்த காலத்தில் புரட்சி செய்து கடந்த கால ஆட்சியை கவிழ்த்து நல்லாட்சியை உருவாக்கினோம். இதேபோன்று நாட்டில் சிகரெட் பாவனையை ஒழிப்பதற்கு அனைத்தையும் முன்னெடுப்போம். சிகரட் மீதான வரியை நூற்றுக்கு 90 வீதம் உயர்த்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என்றார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:26:20
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32