சிகரட்டுக்கான வரியை அதிகரிப்பது தொடர்பான யோசனை அமைச்சரவைக்கு முன்வைக்கப்படும் . எதிர்வரும் 2020 ஆம் ஆண்டில் இலங்கையில் புகையிலை பயிர்செய்கைக்கு தடை ஏற்படுத்தப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
உலக புகையிலை எதிர்ப்பு தினம் தொடர்பான நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பு பண்டாரநாயக சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் பி. குழு அறையில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
ஜனாதிபதி இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
சிகரட் புகைப்பதால் இலங்கையில் ஒருவருடத்திற்கு 25000 பேர் உயிரிழக்கின்றனர். இதில் பெரும்பாலானோர் சிகரட் புகையை சுவாசிக்கும் பிள்ளைகளே இடம்பெறுகின்றனர்.
இன்று நாட்டில் வறுமையில் வாடும் குடும்பங்கள் சிகரட் பழக்கத்தினாலும், மதுபாவனையாலுமே அந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அவர்களது குடும்ப வருமானத்தில் நூற்றுக்கு 35 சதவீதத்தை சிகரட்டுக்கும், மதுவுக்குமே செலவு செய்கின்றனர். இதனால் அவர்கள் வறுமையிலிருந்து மீள முடியாதுள்ளது. ஒருபுறம் வறுமை மறுபுறம் நோய் இவர்களை வாட்டி வதைக்கின்றது.
எனவே இதனை தடுக்க பல்வேறு தெ ளிவுபடுத்தல்கள், வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும், புகையிலை மது உற்பத்தி நிறுவனங்கள் அதற்கு எதிராக சூட்சுமமாக தமது வியாபார பிரசாரங்களை ஏமாற்றும் விதத்தில் முன்னெடுக்கின்றன. இலங்கை புகையிலை கூட்டுத்தாபனம் என பிறப்பு சான்றிதழை இந் நிறுவனம் பெற்றிருந்தாலும், அதன் உரிமையாளர்கள், பங்காளர்கள் அனைவரும் வெளிநாட்டவர்கள்.
சிகரெட்டுக்கான வரிகள் அதிகரிக்கப்படுவதில்லை. இது தொடர்பாக இன்று (நேற்று) செவ்வாய்க்கிழமை இடம்பெறும் அமைச்சரவை கூட்டத்தில் நாம் யோசனையை முன்வைப்போம். உடனடியாக சிகரெட்டுக்கான விலையை அதிகரிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு அஸ்பெஸ்டாஸ் பாவனை நாட்டில் தடைசெய்யப்படவுள்ளது. அதேபோன்று 2020 ஆம் ஆண்டில் இலங்கையில் புகையிலை பயிர்செய்கைக்கு தடை விதிக்கப்படும்.
எனவே புகையிலை பயிர்செய்கையாளர்களுக்கு மாற்று பயிர்செய்கை தொடர்பில் தெ ளிவுபடுத்துமாறு விவசாய அமைச்சருக்கு தெரிவித்துள்ளேன். அரசாங்கம் நாட்டு மக்களுக்கான தனது பொறுப்பை நிறைவேற்றும் என்றார்.
சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன இந்த நிகழ்வில் உரையாற்றுகையில்
கடந்த காலத்தில் புரட்சி செய்து கடந்த கால ஆட்சியை கவிழ்த்து நல்லாட்சியை உருவாக்கினோம். இதேபோன்று நாட்டில் சிகரெட் பாவனையை ஒழிப்பதற்கு அனைத்தையும் முன்னெடுப்போம். சிகரட் மீதான வரியை நூற்றுக்கு 90 வீதம் உயர்த்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM