தடை விதித்தவர்களே அதனை  நீக்கியிருப்பது வரவேற்கத்தக்கது  

Published By: MD.Lucias

31 May, 2016 | 06:43 PM
image

என்மீது தடை விதித்தவர்களே அதனை நீக்கினார்கள்.  இத்தகைய நிர்வாக மனநிலை மாற்றம் வரவேற்கத்தக்கது என கிழக்கு மாகாண முதலமைச்சர்   நஸீர்  அஹமட் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர்  முப்படைகளின் தளங்களுக்குள் பிரவேசிப்பதற்கு  விதிக்கப்பட்டிருந்த  தடை நீக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்ததையடுத்து கருத்து வெளியிட்ட முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.   

கடந்த 20ம் திகதி  திருகோணமலை மாவட்டம் சம்பூர்  வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கடற்படை அதிகாரியொருவருக்கும்  முதலமைச்சருக்குமிடையில் ஏற்பட்ட முரண்பாடுகளின் போது முதலமைச்சரால் கடற்படை அதிகாரி மீது   கடும் வார்த்தை பிரயோகங்கள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்டது. 

இதனையடுத்து முப்படைத் தலைமைகள் கூடி முப்படைகளின் தளங்களுக்குள் முதலமைச்சர் நுழைவதற்கு தடை வித்தித்துடன் முதலமைச்சர்  கலந்து கொள்ளும் நிகழ்வுகளை முப்படைகள் புறக்கணிக்கப் போவதாகவும் தீர்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த   தீர்மானம் தற்போது   நீக்கப்பட்டுள்ளதாக  இராணு பேச்சாளரான பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர கூறியுள்ளார். 

இந்நிலையில் முதலமைச்சர் குறிப்பிடுகையில்  

இந்த முடிவைத் நான் வரவேற்கின்றேன்.  தடை விதிக்கும் தீர்மானத்தை யார் எடுத்தார்களோ அவர்களே முன்வந்து அத்தடையையும் நீக்கியிருக்கின்றார்கள்.

இந்த முடிவுக்கான காரணம்  பற்றி நான்  எதுவும் இதுவரை அறிந்திருக்கவில்லை  என்றார். 

 

 

 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02