என்மீது தடை விதித்தவர்களே அதனை நீக்கினார்கள். இத்தகைய நிர்வாக மனநிலை மாற்றம் வரவேற்கத்தக்கது என கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் முப்படைகளின் தளங்களுக்குள் பிரவேசிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்ததையடுத்து கருத்து வெளியிட்ட முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
கடந்த 20ம் திகதி திருகோணமலை மாவட்டம் சம்பூர் வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கடற்படை அதிகாரியொருவருக்கும் முதலமைச்சருக்குமிடையில் ஏற்பட்ட முரண்பாடுகளின் போது முதலமைச்சரால் கடற்படை அதிகாரி மீது கடும் வார்த்தை பிரயோகங்கள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்டது.
இதனையடுத்து முப்படைத் தலைமைகள் கூடி முப்படைகளின் தளங்களுக்குள் முதலமைச்சர் நுழைவதற்கு தடை வித்தித்துடன் முதலமைச்சர் கலந்து கொள்ளும் நிகழ்வுகளை முப்படைகள் புறக்கணிக்கப் போவதாகவும் தீர்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த தீர்மானம் தற்போது நீக்கப்பட்டுள்ளதாக இராணு பேச்சாளரான பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர கூறியுள்ளார்.
இந்நிலையில் முதலமைச்சர் குறிப்பிடுகையில்
இந்த முடிவைத் நான் வரவேற்கின்றேன். தடை விதிக்கும் தீர்மானத்தை யார் எடுத்தார்களோ அவர்களே முன்வந்து அத்தடையையும் நீக்கியிருக்கின்றார்கள்.
இந்த முடிவுக்கான காரணம் பற்றி நான் எதுவும் இதுவரை அறிந்திருக்கவில்லை என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM