(எம்.மனோசித்ரா)
கல்வி பொதுத் தராதர பரீட்சைக்கு நாளை தோற்றவிருக்கும் பரீட்சார்த்திகள் நிலவும் சீரற்ற வானிலையால் ஏதேனும் பாதிப்புக்களுக்குள்ளாகி தமக்குரிய பரீட்சை நிலையங்களுங்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டால் அருகிலுள்ள பரீட்சை நிலையங்களில் பரீட்சை எழுத முடியும் என்று கல்வி அமைச்சு தெரிவித்திருக்கிறது.
நிலவும் சீரற்ற காலநிலையால் நுவரெலியா உள்ளிட்ட பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மண்சரிவு மற்றும் வெள்ளம் என்பவற்றால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களிலுள்ள பரீட்சார்த்திகள் அருகிலுள்ள பரீட்சை நிலையங்களில் பரீட்சை எழுத முடியும்.
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கல்வி அமைச்சினால் உடனடியாக இந்த மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான நடவடிக்களை கல்வி அமைச்சு , பரீட்சை திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ஆகியன இணைந்து முன்னெடுக்கும்.
இந்நடவடிக்கைகள் தொடர்பான தெளிபடுத்தல்கள் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும்.
எனவே இது தொடர்பான மேலதிக தகவல்களை 117 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்கு அழைத்து தெரிந்துகொள்ள முடியும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM