அமெரிக்காவை சேர்ந்த உலகப் புகழ்பெற்ற மலையேற்ற வீரர் பிராட் கோப்ரைட் ஆயிரம் அடி உயரமான மலையின் உச்சியிலிருந்து தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
பிராட் கோப்ரைட் மற்றும் அவரது நண்பரான சக மலையேற்ற வீரர் அய்டன் ஜேக்கப்சன் ஆகிய இருவரும் மெக்ஸிகோ நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள ‘எல் பொட்ரெரோ சிக்கோ’ மலையில் ஏறியுள்ளனர். அப்போது பிராட் கோப்ரைட் மலையின் உச்சியை அடைந்த நிலையில் சற்றும் எதிர்பாராத வகையில் தவறி வீழ்ந்ததிலேயே இந்த உயிரிழப்பு நேர்ந்துள்ளது.
31 வயதுடைய இவர் எவ்வித பாதுகாப்பு உபகரணமும் இல்லாமல் மலையேறுவதில் வல்லவர். இதனால் இவர் உலகம் முழுவதும் பிரபலமான மலையேற்ற வீரராக திகழ்ந்தார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள உலகின் மிக உயரமான சிகரங்களில் ஒன்றான ‘எல் கேப்டன்’ சிகரத்தில் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி மிக குறுகிய நேரத்தில் ஏறி சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிராட் கோப்ரைட்டின் இறப்புக்கு உலகம் முழுவதிலும் உள்ள மலையேற்ற வீரர்கள் அதிர்ச்சியும், இரங்கலும் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM