(எம்.ஆர்.எம்.வஸீம்)
நீர்வழங்கல் அமைச்சு பாரிய நிதி நெருக்கடியிலே தொழிற்பட்டு வருகின்றது. இருந்தபோதும் எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் நீர் கட்டணத்தை அதிகரிக்கும் எந்த திட்டமும் எம்மிடமில்லை என நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
நீர்வழங்கல் மற்றும் வசதிகள் இராஜாங்க அமைச்சராக நியமனம்பெற்ற அமைச்சர் வாசுதேவ நானயக்கார இன்று பத்தரமுல்லையில் அமைந்துள்ள நீர்வழங்கல் அமைச்சில் பதவியை ஏற்றுக்கொண்டபின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அத்துடன் நீர்வழங்கல் அமைச்சினால் பாரியதொரு தொகை நிதி செலுத்தவேண்டி இருப்பதாக அமைச்சின் செயலாளர் எமக்கு தெரிவித்திருந்தார். அதனால் இந்த அமைச்சு மிகவும் கஷ்டத்துடனே செல்கின்றது என்பதை உணர்ந்துகொள்ளலாம். கடந்த அரசாங்கம் இந்த அமைச்சு செலுத்துவேண்டிய எந்த தொகையையும் செலுத்தாமல், இன்டபிரைஸ் சிறிலங்கா, கிராம எழுச்சி என தெரிவித்துக்கொண்டு அதற்கு பணத்தை செலவழித்து வந்திருக்கின்றது. அதனால் இந்த பிரச்சினைக்கு தீர்வொன்றை பெற்றுக்கொள்ள வேண்டியிருக்கின்றது.
அத்துடன் நாட்டில் சிறியதொரு பிரிவினர் நீரை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் அதிகமானவர்களுக்கு நீர் இல்லாத பிரச்சினை இருந்துவருகின்றது. அதனால் இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண்பதென்பது பாரிய சவாலாகும். என்றாலும் நாட்டில் அதி கஷ்டத்துடன், தண்ணீர் இல்லாமல் வாழும் மக்களுக்கு முன்னுரிமை வழங்கி அவர்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வை காண்பதே எமது நோக்கமாகும் என்றும் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM