(ஆர்.விதுஷா)
வறுமையை ஒழித்தல் தொடர்பில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்ட விடயங்களில் கவனம் செலுத்தி முன்னேற்றகரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்த சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் தாரக பலசூரிய சமுர்த்தி கொடுப்பனவு பெறும் குடும்பங்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் அவர்களுக்குரிய தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தி கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக குறிப்பிட்டார்.
சமுர்த்தி உத்தியோகத்தர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தி அதனை நிவர்த்திசெய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சராக தாரக பலசூரிய கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வு மகளிர் ,சிறுவர்கள் விவகாரம் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சில இன்று இடம் பெற்றது . இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது , புதிய பாதை பயணத்தில் பங்கு கொள்வதற்கு இளம் அமைச்சர்களை தெரிவு செய்தமையை முன்னிட்டு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிற்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.
எனக்கு கிடைக்கப்பெற்றுள்ள பொறுப்பை சரிவர நிறைவேற்ற நம்பிக்கையுடன் செயற்படுவேன். எனது தந்தையின் வழியிலேயே எனக்கு அரசியலில் நுழைய வாய்ப்பு கிடைத்தது.
எனது பணியை சரிவர நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைளை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளேன் என அவர் தெரித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM