(எம்.மனோசித்ரா)
நாட்டில் எதிர்வரும் காலங்கில் தீர்க்கமான தேர்தல்கள் நடைப்பெறவுள்ள நிலையில் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தற்போது பதவி விலகுவது சிறப்பானதாக அமையாது என சபாநாயகர்கரு ஜயசூரிய தெரிவித்தார்.
அத்துடன் விஷேடமாக கடந்த தேர்தல்களின் போது மஹிந்த தேசப்பிரியவின் வழிகாட்டலின் கீழ் தேர்தல்கள் ஆணைக்குழு மகத்தான சேவையை ஆற்றியிருந்தது.
எனவே எதிர்வரும் தேர்தர்களிலும் மஹிந்த தேசப்பிரியவின் வழிகாட்டலின் கீழ் தேர்தல்கள் ஆணைக்குழுவின் சேவையை அத்தியாவசியமாகக் கருதுவதால் அவர் தொடர்ந்தும் பதவி வகிக்க வேண்டும் என்பதே எனது விருப்பமாகும் என்றும் சபாநாயகர் மேலும் தெரிவித்திருக்கிறார்.
சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவின் பதவியிலிருந்து விலக தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளதாக அறியக்கிடைத்திருக்கிறது.
இந் நிலையில் இவ்விடயம் தொடர்பில் சபாநாயகர் அலுவலகத்தினால் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிவிப்பிலேயே அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM