யாழ்ப்பாணத்தில் மாவீரர் தினத்தன்று வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணம் – பாசையூர் அந்தோனியார் தேவாலயத்திற்கு அருகில் உள்ள கடற்கரை பகுதியிலிருந்து இரண்டு கிலோ கிராம் வெடிமருந்து நேற்று (27) மீட்கப்பட்டுள்ளது.
இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலுக்கு அமைய குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே இவை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இராணுவ புலனாய்வுப் பிரிவினரின் தகவலுக்கு அமைய விசேட அதிரடிப் படையினர் தேடுதலில் ஈடுபடடனர்.இந்நிலையிலேயே 2 கிலோ வெடிமருந்து மீட்கப்பட்டுள்ளது.
மேலும் வெடிமருந்து தடைசெய்யப்பட்ட மீன்பிடி நடவடிக்கைக்காக கொண்டுவரப்பட்டு இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
குறித்த வெடிமருந்து தொடர்பாக இதுவரை எந்த சந்தேகநபர்களும் கைது செய்யப்படவில்லை என்பதுடன் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM