(எம்.மனோசித்ரா)
இடைக்கால அரசாங்கத்தின் அமைச்சுக்களுக்காக நியமிக்கப்பட்ட இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் சிலர் இன்றும், வியாழக்கிழமை உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
அதற்கமைய மின்சக்தி இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே அமைச்சில் இன்ற(28.11.2019) கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். இதன் போது 'ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் கொள்கை பிரகடனத்துக்கு ஏற்ப நாட்டில் அனைத்து மக்களுக்கும் தடையின்றி 24 மணித்தியாலயங்களும் மின்சாரத்தை பெற்றுக் கொடுப்பதே தமது இலக்கு ' என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
இதே வேளை , மஹிந்த சமரசிங்க பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சராக கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக ரொஷான் ரணசிங்க கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டதோடு இந்நிகழ்வில் அமைச்சர் சமல் ராஜபக்ஷவும் கலந்து கொண்டார்.
துறைமுக அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கனக ஹேராத் இன்று அமைச்சில் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM